பக்கம் எண் :

மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய சூ 30233

வுந்,     “தோற்றஞ்சா     றொகுபொருள்”  என்பதற்குத்  தோற்றம்  அமைந்த   திரண்ட  பொருளாவன
அந்நாடுகாத்துப்   பெற்ற   அறம்   பொருளின்பம்   எனவும்,  “பகையறு      பயவினை”  என்பதற்குப்
பகையறுதற்குக்  காரணமாகிய நாடாகிய பயனைத்தரும் வினையெனவும்,     “வேட்ட பொருள்” என்பதற்கு
அறம் பொருளின்பமெனவும் பொருளுரைத்துக் கொள்க.
  

பிறவும் இவ்வாறு வருவன உய்த்துணர்ந்து பொருள் கூறுக.
  

இனிக்,
  

“கேள்கே டூன்றங் கிளைஞ ராரவுங்
கேளல் கேளிர் கெழீஇயின ரொழுகவு
மாள்வினைக் கெதிரிய வூக்கமொடு புகல்சிறந்து”.
  

(அகம்-93)
 
  

என வாணிகர் பொருள்வயிற் பிரிந்தவா றுணர்க.
  

“நாட்டோ ராக்கம் வேண்டியு மொட்டிய
நின்றோ ளணிபெற வரற்கு
மன்றோ தோழியவர் சென்ற திறமே”  
  

(நற்றிணை-286)
 

என்பதனுள் அணியென்றது பூணினை.
  

பிறவும் இவ்வாறு வருவன உய்த்துணர்ந்து கொள்க.
  

பாரதியார்
  

30. மேவிய........................பிரிவே
  

கருத்து:-  இது,  மேற்கூறிய  ஓதல்  பகைதூது  ஒழிய, காவல் பொருளெனப் பிறவசைப் பிரிவுகளையும்,
அப்பிரிவுகளுக்குரியாரையுங் கூறுகின்றது.
  

பொருள்:-  மேவிய   சிறப்பின் ஏனோர் - வேந்தனொடு பொருந்திய சிறப்புடைய வேந்தன் கிளைஞர்
ஏனாதியர்  முதலியோர்;   படிமைய    முல்லை  முதலாச் சொல்லிய - நிலவகுப்புக்களான முல்லை முதல்
நெய்தலிறுதியாக  (மேலே  ஐந்தாஞ்   சூத்திரத்திற்)    சொல்லப்பட்ட  நால்வகை  உலகங்கள்; முறையாற்
பிழைத்தது பிழையாதாகல் வேண்டியும் - முறை வழுவித்   தப்பியது   முறையாற்றப்பாதாதலை விரும்பியும்
இழைத்த  ஒண்பொருண்முடியவும் - (யாவரும்) வினைசெய்து உயர்ந்த  பொருளை    ஆக்கவும்; பிரிவே -
பிரிதல்நிகழும்.