பக்கம் எண் :

மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்தே சூ.31237

இவற்றுள்     வேள்விக்குப்  பிரிந்து  சடங்கிற்கு  உறுப்பாகியும்    அதற்குக்  குரவனாகியும்  நிற்றல்
உரிமையின்  ஆண்டு  வேள்வி  செய்தான்  கொடுத்த  பொருள்கோடல்   வேண்டுதலானும் அறங்கருதித்
தூதிற்  பிரிவினும்  அவர் செய்த பூசனை கோடல் வேண்டுமாகலானும்    அவை அந்தணர்க்குப் பொருள்
வருவாயாயிற்று வேள்விக்குப் பிரிதல் ஓதற்பிரிவின் பகுதியாயிற்று.
  

உதாரணம்:
  

“நெஞ்சு நடுக்குறக் கேட்டுங் கடுத்துந்தா
மஞ்சி தாங்கே யணங்காகு மென்னுஞ்சொ
லின்றீங் கிளவியாய் வாய்மன்ற நின்கேள
புதுவது பன்னாளும் பாராட்ட யானு
மிதுவொன் றுடைத்தென வெண்ணி யதுதேர
மாசில்வண் சேக்கை மணந்த புணர்ச்சியுட்
பாயல்கொண் டென்றோட் கனவுவா ராய்கோற்
றொடிநிரை முன்கையாள் கையாறு கொள்ளாள்
கடிமனை காத்தோம்ப வல்லுவள் கொல்லோ
விடுமருப் பியானை யிலங்குதேர்க் கோடு
நெடுமலை வெஞ்சுரம் போகி நடுநின்றெஞ்
செய்பொருண் முற்று மளவென்றா ராயிழாய்
தாமிடை கொண்ட ததுவாயிற் றம்மின்றி
யாமுயர் வாமு மதுகை யிலமாயிற்
றொய்யி றுறந்தா ரவரெனத் தம்வயி
னொய்யார் நுவலும் பழிநிற்பத் தம்மொடு
போயின்று சொல்லென் னுபிர்”. 
  

(கலி 24)
 

இதனுள்     ‘நடுநின்’  றென்றதனான்  இருபெரு  வேந்தரையுஞ்சந்து  செய்வித்தற்கு  யான்  நடுவே
நிற்பலென்று,    “எஞ்   செய்   பொருள்   முற்றுமள’   வென்றதனான்   அது   முடிந்த   பின்னர்
யாம்பெருதற்குரியவாய்  அவர்  செய்யும்  பூசனையாகிய  பொருண்  முடியுமளவுமென்றும், அந்தணன்
பொருள்வயிற்   பிரியக்   கருதிக்   கூறிய  கூற்றினை  அவன்  தலைவி  கூறியவாறுணர்க  இதனைக்
‘கடிமனைகாத்’ தென்றதனை இல்லறமாகவும், ஓம்ப, வென்றதனைச் செந்தீயோம்பவென்றுங் கொள்க.
  

“நன்கலங் களிற்றொடு நண்ணா ரேந்தி
வந்துநிறை கொடுத்து வணங்கினர் வழிமொழிந்து”,
 

(அகம்-124)