பக்கம் எண் :

240தொல்காப்பியம் - உரைவளம்

2. “நட்டோ ராக்கம் வேண்டியும் ஒட்டிய
நின்றோள் அணிபெற வரற்கும்
அன்றோ தோழி யவர்சென்ற திறமே”
  

  (நற்றிணை-286)
 

3. “ஈதலுந் துய்த்தலு மில்லோர்க் கில்லெனச்
செய்வினை கைம்மிக வெண்ணுதி அவ்வினைக்
சும்மா வரிவையும் வருமோ,
வெம்மை யுய்த்தியோ வுரைத்திசை னெஞ்சே”
  

 (குறுந்தொகை.63)

(II)  தூதுப்பிரிவுக்குச் செய்யுள் :
  

(1) “மிகைதணித தற்கரி தாமிரு வேந்தர்வெம் போர்மிடைந்த
பகைதணித் தற்குப் படர்தலுற்றார் நமா, பல்பிறவித
தொகை தணித்தற்கென்னை யாண்டுகொண்டோன் றில்லைச்
(சூழ்பொழில்வாய்
முகைதணித்தற் கரிதாம் புரிதாழ்தரு மொய்குழலே”
  

-திருச்சிற்றம்பலக்கோவையார்.
   

(2) “இகலுமிரு வேந்தர்க் கிடையமரின் தீமை
அகலப் பொருத்த அகன்றார் - நகையாமே
காமப் பகைதணியக் கற்பின் மனைபொருந்தி
ஏம மெமக்கீயா தின்று”
  

சிவலிங்கனார்
  

இச்சூத்திரம்  பொருள்  வயிற் பிரிவானது அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் என்னும் நால்வர்க்கும்
உரியது என்கின்றது.
  

(இ-ள்)    மேல் ஓர் முறைமை - மேற் சூத்திரத்துச் சொல்லப்பட்ட பிரிவுகளுள் பொருள் வயிற் பிரிவு
என்பது  ஒன்றும்,  நால்வர்க்கும்  உரித்து அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் என்னும்    நால்வர்க்கும்
உரியதாகும் என்றவாறு.