பக்கம் எண் :

மன்னர் பாங்கிற் பின்னோர் ஆகுப சூ.32243

இதனானே,
  

“பகடுபுறந் தருநர் பார மோம்பிக்
குடிபுறந் தருகுவை யாயின்   
  

  (புறநா-35)
 

எனவும்,
  

“ஞாலத்துக், கூலம் பகர்நர் குடிபுறந் தராஅக்
குடிபுறந் தகுநர் பார மோம்பி”  

(பதிற்றுப்-13)

எனவுஞ் சான்றோர் கூறியவாறுணர்க.
  

உதாரணம் :-
   

“வேந்தன் குறைமொழித்து வேண்டத் தலைப்பிரிந்தார்
தாந்தங் குறிப்பின ரல்லரா லேந்திழாய்
கண்பனி வாரக் கலங்கல் பிரிவரோ
தண்பனி நாளே தளித்து”  

எனவரும்.                                                                     (30)
  

பாரதியார்1 
  

32. மன்னர் பாங்கிற்...........................ஒத்தி னான.
  

கருத்து:-  இது    மன்னரைப்       பொருந்திச்  சிறந்த  வேந்தன்  கிளைஞர்  ஏனாதியர்  முதலிய
மேலோர்க்குமேல்  27, 28 ஆம்   சூத்திரங்களில் கூறிய பகை, காவல், பொருள் பற்றிய பிரிவு ஒழியப் பிற
பிரிவுகள் கூறும் ஒழிபுச் சூத்திரமாகும்.
  

பொருள்:-    உயர்ந்தோர்க்குரிய - அடியோர்   முதலிய  கீழோரல்லாத சிறப்புடையோர்  செய்தற்குப்
பொருந்திய;  ஓத்தின்  ஆன  -  கல்வியான்  ஆம்  பிரிவுவகை   அனைத்துக்கும்;     மன்னர்  பாங்கிற்
பின்னோர் ஆகுப - மன்னர் சார்பில் அவரொடு சிவணிப் பின்னிற்போர் உரியராவர்.
  

குறிப்பு:-   பிரிவைந்தனுள் பொருளும் போரும் எல்லார்க்கும் பொது. ஓதலும் தூதும் அடியார் முதலிய
கீழோரை    விலக்கி  மற்ற நானில மேன் மக்களுக்குரிய என்பதை மேல் 25, 26 ஆம் சூத்திரங்கள் கூறின.
நாடு காவற்பிரிவு மன்னரொடு சேர்ந்து
  


1. இவர் கூறும் உரை ஆராயத்தக்கது. இதையும் அடுத்த சூத்திரத்தையும் ஒரு சூத்திரமாகக் கூறுவர்.