இது வணிகர்க்கு உரியதொரு பிரிவு உணர்த்துதல் நுதலிற்று. |
(இ-ள்) உயர்ந்தோர்க்கு - மேல் அதிகரிக்கப்பட்ட பின்னோராகிய இருவகையோரிலும் உயர்ந்தோராகிய வணிகர்க்கு ஓத்தினான உரிய - ஓதுதல் நிமித்தமாகப் பிரிதலும் உரித்து. |
ஓத்துப் பலவாதலின் ‘உரிய’ என்றார். ஈண்டு ஓத்து என்பது வேதம்; அது நால்வகை வருணத்தினும் மூவர்க்கு உரித்தென்பது இத்துணையெனக் கூறப்பட்டது. |
நச்சினார்க்கினியம் |
33. உயர்ந்தோர்........................ஆன |
இது நான்கு வருணத்தோர்க்கும் எய்தாத தெய்வித்தது |
(இ-ள்) ஓத்தின் ஆன-வேதத்தினாற் பிறந்த வடநூல்களும் தமிழ் நூல்களும்; உயர்ந்தோர்க்கு உரிய-அந்தணர் அரசர் வணிகர்க்கும், உயர்ந்தவேளாளர்க்கும் உரிய என்றவாறு- |
அவை சமயநூல்களும் ஒன்றற்கொன்று மாறுபாடு கூறுதருக்க நூல்களும் தருமநூல்களும் சோதிடமும் வியாகரணம் முதலியனவும் அகத்தியம் முதலாகத் தோன்றிய தமிழ் நூல்களுமாம். வேதந்தோன்றிய பின்னர் அது கூறிய பொருள்களை இவையும் ஆராய்தலின் ஓத்தென்பது வேதத்தையே யாதலின். |
சிவலிங்கனார் |
இச்சூத்திரம் அறவொழுக்கங்கள் உயர்ந்தோர்க்கு உரியது என்கின்றது. |
(இ-ள்) நூல்களிற் சொல்லப்பட்ட ஒழுக்கங்கள் உயர்ந்தோர்க்கு உரியனவாம். மற்றையோர்க்கு இல்லை என்றவாறு (உயர்ந்தோராவார் ‘ஓதலும்தூதும் உயர்ந்தோர் மேன 28) என்பதிற்கூறப்பட்டவர். ஓத்து-நூல். பாடப்படுவது பாட்டு என்பது போல் ஓதப்படுவது ஓத்து ஆயிற்று. ‘ஆன’ என்றது அதன் கூறப்படும் ஒழுக்கங்களை. |