பக்கம் எண் :

அகத்திணையியல் சூ.35, 36249

இளம்பூரணர்
  

35. பொருள்வயின்.....................உரித்தே.
  

இதுவும் அது.
  

(இ-ள்)  பொருள்  வயின்  பிரிதலும்  அவர்வயின் உரித்து-பொருள் வயிற்பிரிவும் மேற் சொல்லப்பட்ட
வணிகர் வேளாளரிடத்தில் உரியதாகும் (ஏகாரம் ஈற்றசை)
  

36. உயர்ந்தோர்..................தான
  

இஃது அந்தணர் பொருட்டுப் பிரியுந்திறன் உணர்த்துதல் நுதலிற்று.
  

(இ-ள்)   உயர்ந்தோர்   பொருள்வயின்   ஒழுக்கத்தான  -உயர்ந்தோராகிய அந்தணர்  பொருள்வயிற்
பிரியுங்காலத்து ஒழுக்கத்தானே பிரிய.
  

இதனாற்     சொல்லியது,  வணிகர்க்கும்  வேளாளர்க்கும்,   வாணிகம்  முதலாயின  பொருணிமித்தம்
ஆகியவாறு   போல   அந்தணர்க்கு   இவை   பொருணிமித்தம்     ஆகா   என்பதூஉம்,   அவர்க்கு
இயற்கையொழுக்கமாகிய   ஆசாரமும்,  செயற்கையொழுக்கமாகிய    கல்வியுமே  பொருட்டு  காரணமாம்
என்பதூஉம் கண்டவாறு. (ஈற்றகரம் சாரியை)   (36)
  

நச்சினார்க்கினியர்1
  

35. பொருள்வயிற்..................தான
  

இஃது அக்குறுநில மன்னர்க்குப் பொருள்வயிற் பிரிதலும் உரியவென்கிறது.
  

(இ-ள்)     பொருள்  வயினும்  -  தமக்குரிய  திறையாகப்   பெறும்  பொருளிடத்தும்;  உயர்ந்தோர்
ஒழுக்கத்துக்கு   ஆன  பொருள்வயினும்-உயர்ந்த  நால்வகை    வருணத்தார்க்குரிய  ஒழுக்கத்திலேயான
ஒத்திடத்தும்;  பிரிதல்  அவர்வயின்  உரித்து  -  பிரிந்து    சேறல்  அக்குறுநில  மன்னரிடத்து உரித்து
என்றவாறு.
  


1. உரை பொருந்துமாறு ஆய்க.