35. நச்சினார்க்கினியர் |
38. எத்திணை...............யான |
இஃது இத்துணையும் பாலைக்கு உரிய இலக்கணங் கூறி, மகடூஉ அதிகாரப் படுதலிற் பெருந்திணைக்கு உரியதோர் இலக்கணங் கூறுகின்றது. |
(இ-ள்) எத்திணை மருங்கினும் - கைக்கிளை முதற் பெருந்திணையிறுவாய் ஏழன் கண்ணும்; மகடூஉ மடல்மேல் நெறிமை - தலைவி மடலேறினாளாகக் கூறும் புலனெறி வழக்கம்; பொற்புடைமை1 இன்மையான - பொலிவுடைமையின்று; ஆதலான் அது கூறப்படாது எ-று |
“கடலன்ன காம முழந்து மடலேறாப் பெண்ணிற் பெருந்தக்க தில்” |
(குறள் 1137) |
எனவரும். |
“கடலன்ன காமத்த ராயினும் பெண்டிர் மடலூரார் மைந்தர்மே லென்ப - மடலூர்தல் காட்டுகேன் வம்மின் கலிவஞ்சி யார்கோமான் வேட்டமா மேல்கொண்ட போழ்து” |
என்றாராலோவெனின் இது மடலேற்றன்று; ஏறுவல்லெனக் கூறிய துணையேயாம். |
பாரதியார் |
38. எத்திணை.................யான |
கருத்து:- இது, மகளிர்க்கு மடலேற விரும்புதலும் முறையன்று என விலக்குதல் நுதலிற்று. இதுவும் பெண்ணியல் கூறும் பெற்றித்தாகலின், மகளிர்க்கு முந்நீர் வழக்கம் மறுக்கும் இச்சூத்திரம் அமைக்கப்பட்டது. |
பொருள்:- எத்திணை மருங்கினும்-அகத்திணை ஏழனுள் எதன் கண்ணும்; மகடூஉ மடன்மேல்-தலைவி மடலேற விரும்புதல்; பொற்புடை நெறிமை யின்மையான - அழகிய முறைமை இல்லை. |
1. இன்மை என்பதிலுள்ள ‘மை’ இதற்குக் கூட்டப்பட்டது. |