பக்கம் எண் :

எத்தனை மருங்கினும் மகடூ மடல்மேல் சூ.38257

35. நச்சினார்க்கினியர்
  

38. எத்திணை...............யான
  

இஃது  இத்துணையும்  பாலைக்கு உரிய இலக்கணங் கூறி, மகடூஉ அதிகாரப் படுதலிற் பெருந்திணைக்கு
உரியதோர் இலக்கணங் கூறுகின்றது.
  

(இ-ள்)    எத்திணை மருங்கினும் - கைக்கிளை முதற் பெருந்திணையிறுவாய் ஏழன் கண்ணும்; மகடூஉ
மடல்மேல்   நெறிமை   -  தலைவி  மடலேறினாளாகக்  கூறும்  புலனெறி  வழக்கம்;  பொற்புடைமை1
இன்மையான - பொலிவுடைமையின்று; ஆதலான் அது கூறப்படாது எ-று
  

“கடலன்ன காம முழந்து மடலேறாப்
பெண்ணிற் பெருந்தக்க தில்”     
 

 (குறள் 1137)
 

எனவரும்.
  

“கடலன்ன காமத்த ராயினும் பெண்டிர்
மடலூரார் மைந்தர்மே லென்ப - மடலூர்தல்
காட்டுகேன் வம்மின் கலிவஞ்சி யார்கோமான்
வேட்டமா மேல்கொண்ட போழ்து”
 

என்றாராலோவெனின் இது மடலேற்றன்று; ஏறுவல்லெனக் கூறிய துணையேயாம்.
  

பாரதியார்
  

38. எத்திணை.................யான
  

கருத்து:-     இது, மகளிர்க்கு மடலேற விரும்புதலும் முறையன்று என விலக்குதல் நுதலிற்று. இதுவும்
பெண்ணியல்   கூறும்   பெற்றித்தாகலின்,   மகளிர்க்கு   முந்நீர்   வழக்கம்  மறுக்கும்  இச்சூத்திரம்
அமைக்கப்பட்டது.
  

பொருள:-  எத்திணை  மருங்கினும்-அகத்திணை  ஏழனுள் எதன் கண்ணும்; மகடூஉ மடன்மேல்-தலைவி
மடலேற விரும்புதல்; பொற்புடை நெறிமை யின்மையான - அழகிய முறைமை இல்லை.
  


1. இன்மை என்பதிலுள்ள ‘மை’ இதற்குக் கூட்டப்பட்டது.