பக்கம் எண் :

262தொல்காப்பியம் - உரைவளம்

பி. இ. நூ.
  

நம்பி 185
  

செவிலி அறத்தொடு நிற்றலிற் கவலையிற்
பாங்கி தன்னொடும் பாங்கியர் தம்மொடும்
அயலார் தம்மொடும் பயிலிடந் தம்மொடும்
தாங்கல ளாகிச் சாற்றிய வெல்லாம்
பூங்கொடி நற்றாய் புலம்பற் குரிய
நிமித்தம் போற்றலும் சுரம்தணி வித்தலும்
தன்மகள் மென்மைத் தன்மைக் கிரங்கலும்
இளமைத் தன்மைக்கு உளம்மெலிந் திரங்கலும்
அச்சத் தன்மைக்கு அச்சமுற் றிரங்கலும்
எனஇவை ஐந்தும் அனைமருட்சிக் குரிய.
  

இல. அக. 538.
  

வினவிய பாங்கியின் உணர்ந்த காலை
இனையல் என்போர்க்கு எதிரழிந்து உரைத்தலும்
தன்னறி வின்மை தன்னைநொந் துரைத்தலும்
தெய்வம் வாழ்த்தலும் இவ்வொரு மூன்றும்
செவிலி அறத்தொடு நிற்றலிற் கவலையின்
பாங்கி தன்னொடும் பாங்கியர் தம்மொடும்
அயலவர் தம்மொடும் பயிலிடந் தன்னொடும்
தாங்கல ளாகிச் சாற்றிய நான்கும்
நிமித்தம் போற்றலும் சுரம்தணி வித்தலும்
தன்மகள் மென்மைத் தன்மைக் கிரங்கலும்
இளமைத் தன்மைக் குளமெலிந் திரங்கலும்
அச்சத் தன்மைக் கச்சமுற் றிரங்கலும்
ஆகிய ஐந்தும் (போகிய இறைமகள்
ஆயமும் தாயும் அமுங்கக் கண்டு
காதலின் இரங்கும் கண்டோர் இரக்கமும்)
ஆற்றாத் தாயைத் தேற்றலும் ஆற்றிடை
முக்கோல் பகவரை வினாதலும் மிக்கோர்
ஏதுக் காட்டலும் எயிற்றியொடு புலம்பலும்
குரவொடு புலம்பலும் சுவடுகண் டிரங்கலும்
கலந்துடன் வருவோர்க் கண்டுகேட் டலுமவர்
புலம்பல் தேற்றலும் புதல்வியைக் காணாது