பக்கம் எண் :

தன்னும் அவனும் அவளும் சூ.39267

பகுதியென்றவற்றோடு   கூட்டி வருந்திக்   கூறலும்;   தோழி தேஎத்தும் கண்டோர் பாங்கினும் புலம்பலும்
- தோழியது ஆற்றாமையைக் கண்டுழியுந் தலைவியைத்    தேடிப்போய்க் காணாது வந்தாரைக் கண்டுழியும்
வருந்திக்  கூறலும்;  அவ்வழி  ஆகிய  கிளவியும்  அவ்வுடன்     போக்கிடத்தைச்  சான்றோர் புலனெறி
வழக்கஞ் செய்தற்குரியவாய் வருங் கிளவிகளும்; உரிய - உடன்போகிய திறத்து உரிய எ-று.
  

நற்றாய்     புலம்பலுங்  கிளவியும்  போகிய  திறத்து    உரியவென  முடிக்க2  என்றென்பதனையும்
புலம்பலென்பதையும்  யாண்டுங்கூட்டுக.  3இங்ஙனம்  உடன்      போக்கி  வருந்துதல் நோக்கித் தாயை
முன்கூறித்  தலைவன் கொண்டு போயினமை நோக்கித் தலைவி   முன்னர் அவனைக் கூறினார். அவளும்
அவனும் என்று பாடம் ஓதுவாரும் உளர்.
  

உதாரணம்:
  

“மள்ளர் கொட்டின் மஞ்ஞையாலும்
உயர்நெடுங் குன்றம் படுமழை தலைஇச்
சுரநனி யினிய வாகுக தில்ல
அறநெறி யிதுவெனத் தெளிந்தவென்
பிறைநுதற் குறுமகள் போகிய சுரனே.” 
  

(ஐங்-371)
 

இதனுள்,     ‘அறநெறி  இதுவெனத்  தெளிந்த  என்மக’  ளென்று    தாய்  கூறவே  உடன்போக்குத்
தருமமென்று     மகிழ்ந்து   கூறி   அங்ஙனங்  கூட்டிய   நல்வினையைத்  தன்  நெஞ்சிற்கு  விளக்கிப்
புலம்பியவாறு காண்க.
  

“நாடோறுங் கலுழு மென்னினு மிடைநின்று
காடுபடு தீயிற் கனலியர் மாதோ
  


2. போகிய திறத்து நற்றாய் போகிய திறத்துப் புலம்பலும், போகிய திறத்துக் கிளவியும் என முடிக்க.  

3. நிமித்தம்   என்று  மொழிப்பொருள்   என்று தெய்வம் என்று நன்மை தீமை என்று அச்சம் சார்தல்
என்று எனவும்  கால மூன்றுடன் முன்னிய விளக்கிப் புலம்பல், அச்சம் சார்தல்-அவற்றொடு விளக்கிப்
புலம்பல் தோழி தேஎத்தும் கண்டோர் பாங்கினும் புலம்பல் எனவும் கூட்டுக.