பொலம்புனை கலத்தில தருகுவென் மாதோ வெஞ்சின விறல்வேல் விடலையோ டஞ்சி லோதியை வரக்கரைந் தீமே.” |
(ஐங்குறு-391) |
இவ் வைங்குறுநூறு நிமித்தத்தொடுபடுத்துப் புலம்பியது. நற்சொல்லொடு படுத்தன வந்துழிக் காண்க. |
இனி அன்ன பிறவுமென்றதனால்’ |
“ஈன்று புறந்தந்த எம்மும் உள்ளாள் வான்தோய் இஞ்சி நன்னகர் புலம்பத் தனிமணி இரட்டுந் தாளுடைக் கடிகை நுழைநுதி நெடுவேற் குறும்படை மழவர் முனையாத் தந்து முரம்பின் வீழ்த்த வில்லேர் வாழ்க்கை விழுத்தொடை மறவர் வல்லாண் பதுக்கைக் கடவுட் பேண்மார் நடுகற் பீலிசூட்டித் துடிபடுத்துத் தோப்பிக் கள்ளொடு துரூஉப்பலி கொடுக்கும் போக்கருங் கவலைய புலவுநா றருஞ்சுரந் துணிந்துபிறள் ஆயினள் ஆயினும் அணிந்தணிந் தார்வ நெஞ்சமோ டாய்நலன் அளைஇத்தன் மார்பு துணையாகத் துயிற்றுக தில்ல துஞ்சா முழவிற் கோவற் கோமான் நெடுந்தேர்க் காரி கொடுங்கான் முன்றுறைப் பெண்ணையம் பேரியாற்று நுண்ணறல் கடுக்கு நெறியிருங் கதுப்பினென் பேதைக் கறியாத் தேஎத் தாற்றிய துணையே.” |
(அகம் 35) |
இவ்வகம் தலைவன் மிகவும் அன்பு செய்கவென்று தெய்வத்திற்குப் பராஅயது. |
“நீர்நசைக் கூக்கிய வுயவல் யானை யியம்புணர் தூம்பி னுயிர்க்கு மத்தஞ் சென்றனன் மன்றவென் மகளே பந்தும் பாவையுங் கழங்குமெமக் கொழித்தே.” |
(ஐங்குறு-377) |
இவ்வைங்குறுநூறு யாம் இவற்றைக் கண்டு வருந்த இவற்றை நமக்கு ஒழித்துத்தான் நீரிலா ஆரிடைப் போயினாளென்றது. |