“மாண்பில் கொள்கையொடு மயங்குதுயர் செய்த வன்பி லறனு மருளிற்று மன்ற வெஞ்சுர மிறந்த அஞ்சி லோதி பெருமட மான்பிணை யலைத்த சிறுநுதற் குறுமகட் காட்டிய வம்மே.” |
(ஐங்குறு-396) |
இவ்வைங்குறுநூறு தலைவி மீண்டு வந்துழித்தாய் சுற்றத்தார்க்குக் காட்டியது. |
“நும்மனைச் சிலம்பு கழீஇ யயரினு சொல்லி னெவனோ மற்றே வென்வேன் மையற விளங்கிய கழலடிப் பொய்வல் காளையை யீன்ற தாய்க்கே.” |
(ஐங்குறு-399) |
இவ் வைங்குறுநூறு தலைவன் மீண்டு தலைவியைத் தன் மனைக்கட் கொண்டு வந்துழி அவன் தாய் சிலம்புகழி நோன்பு செய்கின்றாளெனக் கேட்ட நற்றாய் ஆண்டு நின்றும் வந்தார்க்குக் கூறியது. |
இன்னுஞ் சான்றோர் செய்யுட்களுள் வேறுபட வருவனவெல்லாம் இதனான் அமைக்க. |
39. தன்னும்... ... ... ... உரிய |
பாரதியார் |
கருத்து:- இது தலைவனுடன்போன தலைவியின் பிரிவாற்றாத தாயாரின் பரிவு நிலைமையும், அதுபற்றிக் கூற்று நிகழும் பகுதிகளும் கூறுதல் நுதலிற்று. |
பொருள்:- போகிய திறத்து நற்றாய் புலம்பலும்-தலைமகள் தலைவனுடன் போனவழி, அவளைப் பெற்ற நற்றாயின் துனிதரும் தனிமையில் மகட்பிரிவின் அகப்பிரிவாற் கூறுவனவும், தன்னும் அவனும் அவளுஞ் சுட்டி-தன்னையும் தலைமகனையும் (அவனுடன் சென்ற) தன் மகளையும் குறித்து; மன்னு நிமித்தம் - அடிப்பட்ட புள் என்னும் நிமித்தங்களோடும்; மொழிப்பொருள் - விரிச்சி என்னும் நற்சொல்லோடும்; தெய்வம் - வேலன் வெறியாடல் முதலிய கடவுட் பராவலோடும்; நன்மை தீமை அச்சம் சார்தல் என்பவற்றோடும்; அன்ன பிறவும் - அத்தகைய இடங்களுக்கேற்ற பிற கூற்றுகளையும்; அவற்றோடு தொகைஇ மேற் |