பக்கம் எண் :

தன்னும் அவனும் அவளும் சூ.39277

கொடுங்கோற் கோவலர் பின்னின் றுய்த்தர
  

‘இன்னே வருகுவர் தாயர்’ என்போள்
நன்னர் நன்மொழி கேட்டனம்; அதனால்
நல்ல நல்லோர் வாய்ப்புள்; தெவ்வர்
முனைகவர்ந்து கொண்ட திறையர் வினைமுடித்து
வருதல் தலைவர் வாய்வது; நீநின்
பருவர லெவ்வம் களைமா யோயென”  

(முல்லைப்பாட்டுவரி-7-21)
  

IV. தெய்வத் தொடுபடுத்து நற்றாய் கூறும் கிளவி:
  

‘அருஞ்சுர     மிறந்தஎன் பெருந்தோட்குறுமகள்’   என்னும்   அகம் (195) ஆம் பாட்டில், “அறுவை
தோயும்  ஒரு  பெருங்குடுமிச் சிறுபைஞ்ஞாற்றிய பஃறலைக்கருங்கோல்,  ஆகுவதறியும்,   முதுவாய் வேல,
கூறுக  மாதோ  நின் கழங்கின் திட்பம், ஆறாது வருபனி கலுழும் கங்குலின்   ஆனாது துயரும் என்கண்
இனிது  படீஇயர்,  எம்மனை  முந்துறத் தருமோ, தம்மனை உய்க்குமோ   யாதவன்  குறிப்பே” எனவரும்
அடிகள் தெய்வத்தொடு படுத்து நற்றாய் கூறும் கிளவியாகும்.
  

V.  நன்மை சார்தல்:
  

மள்ளர் கொட்டின் மஞ்ஞை யாலும்
உயர்நெடுங் குன்றம் படுமழை தலைஇச்
சுரநனி யினிய வாகுக தில்ல,
அறநெறி இதுவெனத் தெளிந்தஎன்
பிறைநுதற் குறுமகள் போகிய சுரனே.”
 
  

எனும் ஐங்குறுநூற்று (371)ச் செய்யுள் மகளின் நன்மை தீமை கருதிய தாய் கூறும் கூற்றாம்:
  

VI. உடன்போய மகளின் துன்புறு தீமை கருதிய தாய் கூறும் கிளவி:
  

“நிழலான் றவிந்த நீர் லாரிடைக்
கழலோன் காப்பக் கடுகுபு போகி
அறுசுனை மருங்கின் மறுகுடி வெந்த
வெவ்வங் கலுழி தவ்வெனக் குடிக்கிய
யாங்குவல் லுநள்கொல் தானே ஏந்திய
செம்பொற் புனைகலத் தம்பொரிக் கலந்த