பக்கம் எண் :

278தொல்காப்பியம் - உரைவளம்

பாலும் பலவென உண்ணாள்
கோலமை குறுந்தொடித் தளிரன் னோளே.”   

  (குறு-326)
 

“நீர்நசைக் கூக்கிய உயவல் யானை
இயம்புணர் தூம்பின் உயிர்க்கும் அத்தம்
சென்றனள் மன்றஎன் மகளே
பந்தும் பாவையும் கழங்குமெமக் கொழித்தே”
  

என்பதும் அது.                                                              (ஐங்-377)
  

VII. “அன்ன பிறவும்”   என்றதால்   சூத்திரத்தில்   விதந்து கூறியன வல்லாத பிறபொருந்துந்
துறைகளும் சுட்டப்பட்டன. தலைவினற்றாய் தன்  மகளையுடன் கொண்டு சென்ற தலைவன் தாயை
வெறுத்து நொந்து கூறுவது, “அன்னபிற” வற்றுள் ஒன்றாகும் அதற்குச் செய்யுள்:
  

“நினைத்தொறுங் கவிழும் இடும்பை எய்துக.
புலைக்கோட் பிழைத்த கவைக்கோட்டு முதுகலை
மாண்பிணை அணைதர ஆண்குரல் விளிக்கும்
வெஞ்சுரம் என்மகள் உய்த்த
வம்பமை வல்வில் விடலை தாயே”   
  

  (ஐங்-378)
 

VIII. ‘முன்னியகாலம் மூன்றுடன் விளக்கிப் போகிய திறத்து’ நற்றாய் கூற்றுக்குச் செய்யுள்:
  

“பிரசங் கலந்த சிறுமதி கையளே”
  

எனும் போதனார் நற்றிணைப் பாட்டில்,
  

“----------------------பூந்தலைச் சிறுகோல்
‘உண்’ என றோக்குபு புடைப்ப - - -
அறிநரைக் கூந்தற் செம்முது செவிலியர்
பரீஇ மெலிந்தொழியப் பந்த ரோடி
ஏவன் மறுக்குஞ் சிறுவிளை யாட்டி
அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந் தனள்கொல்
கொண்ட கொழுநன் குடிவற னுற்றெனக்
கொடுத்த தந்தை கொழுஞ்சோ றுள்ளாள்;
ஒழுகுநீர் நுணங்தறல் போலப்
பொழுது மறுத் துண்ணுஞ் சிறுமது கையளே.”  

(நற்றிணை-110)