பக்கம் எண் :

தன்னும் அவனும் அவளும் சூ.39279

எனுமடிகளில்,  தன்  மகளின்  கழிந்த  இளமைச்  செய்தியும்  அறிவொழுக்க நிகழ் காலச் செய்தியும்,
அவள் மனையற எதிர்கால மாட்சியும் கூறுதலறிக.
  

IX. தோழி தேஎத்து நற்றாய் கூற்றுக்குச் செய்யுள்
  

“செல்லிய முயலிற் பாஅய சிறகர்
வாவ லுகுக்கு மாலையாம் புலம்பப்
போகிய அவட்கோ நோவேன், தேமொழித்
துணையிலள் கலுழு நெஞ்சின்
இணையே ருண்கண் இவட்குநோ வதுவே”  

(ஐங்-378)
  

X. கண்டோர் பாங்கில் நற்றாய் கூறுதற்கு எடுத்துக்காட்டுச் செய்யுள்:
  

ஒருமக ளுடையேன் மன்னே; அவளும்
செருமிகு மொய்ம்பிற கூர்வேற் காளையொடு
பெருமலை அருஞ்சுரம் நெருநற் சென்றனள்;
இனியே, தாங்குநின் அவலமென்றிர்; அதுமற்று
யாங்ஙனம் ஒல்லுமோ அறிவுடை யீரே?
உள்ளின் உள்ளம் வேமே, உண்கண்
மணிவாழ் பாவை நடைகற் றன்னவென்
அணியியற் குறுமகள் ஆடிய
மணியோ நொச்சியுந் தெற்றியுங் கண்டே”  

(நற்றிணை-184)
  

இப்பாட்டில்   ‘தாங்குமின்  அவலமென்றிர்,  அதுமற்று  யாங்ஙனம் ஓல்லுமோ  அறிவுடையீரே  என
அறிவுடையோராகிய கண்டோர் பாங்கில் நற்றாய் பகர்ந்த கிளவி காண்க.
  

XI. நற்றாய் தனிமையிற் கூறல்:
  

“இதுவென் பாவை பாவை, இதுவென்
னலமரு நோக்கி னலம்வரு சுடர்நுதற்
பைங்கிளி எடுத்த பைங்கிளி, என்றிவை
காண்டொறுங் காண்டொªறுங் கலங்க
நீங்கின ளொஎன் பூங்க ணோளே”. 

  (ஐங்குறு-375)  
 

எனும்  ஐங்குறு  நூற்றுச்  செய்யுள்,  மகட்  பிரிந்த  தாய்  ஆற்றாமையால் வருந்தும் புலம்பு சுட்டிய
கிளவியாகும்.