பக்கம் எண் :

280தொல்காப்பியம் - உரைவளம்

40. 

ஏமப் பேரூர்ச் சேரியும் சுரத்தும்
தாமே செல்லும் தாயரும் உளரே. 
(40)
 

ஆ. மொ. இல.
  

There are mothers who go themselves to
search of their daughters along the streets
of fortified big cities and through the deserts.
  

இளம்பூரணர்
  

40. ஏமச்பேரூர்ச்...............உளரே.
  

இது, தலைமகள் உடன்போகிய வழிச் செவிலிக்கு உரியதொரு திறன் உணர்த்துதல் நுதலிற்று.
  

(இ-ள்)  ஏமம்பேர் ஊர் சேரியும் - ஏமம் பொருந்திய பெரிய ஊரகத்துச் சேரியின் கண்ணும், சுரத்தும்
-  ஊரினின்றும்  நீங்கிய சுரத்தின் கண்ணும், தாமே செல்லும் தாயரும் உளர் தாமே செல்லும்   தாயரும்
உளர்.
  

  

“தாமே   செல்லுந்  தாயர்”  என்பதனால்  செவிலி  என்பது  பெற்றோரும்;  ‘தாயரும்’  என்றதனால்
கைத்தாயர்  பலர்  என்று  கொள்ளப்படும்.  அவ்வழிச்  சேரியோரை வினாதலும்,   சுரத்திற் கண்டோரை
வினாதலும்  உளவாம்.  சேரியிற்  பிரிதலும்  பாலை யாகுமோ எனின், அது வருகின்ற    சூத்திரத்தினால்
விளங்கும். (ஈற்றேகாரம் அசை)
  

  

சேரியோரை வினாஅயதற்குச் செய்யுள்
  

“இதுஎன் பாவைக் கினியநன் பாவை
இதுவென் பைங்கிளி எடுத்த பைங்கிளி
இதுவென் பூவைக் கினியசொற் பூவையென்று
அலம்வரு நோக்கி னலம்வரு சுடர்நுதல்
காண்தொறுங் காண்தொறுங் கலங்கி
நீங்கின ளோவென் பூங்க ணோளே.”
  

(ஐங்குற் 375 பி-ம்)
  

எனவரும்.
  

சுரத்திடை வினாஅயதற்கு செய்யுள்
  

“எறித்தரு கதிர்தாங்கி யேந்திய குடைநீழல்