உம்மை எண்ணும்மை, தாய ரெனப் பன்மை கூறித்தாமேயெனப் பிரித்ததனாற் சேரிக்கு நற்றாய் சேறலுஞ், சுரத்திற்குச் செவிலித்தாய் சேறலும் புலனெறி வழக்கிற்குச் சிறந்ததென்றுணர்க. |
உதாரணம்: |
“வெம்மலை யருஞ்சுர நம்மிவ ணொழிய விருநில முயிய்ரக்கு மின்னாக் கான நெருநற் போகிய பெருமடத் தகுவி யைதக லல்குற்றழையணிக் கூட்டுங் கூழை நொச்சிக் கீழ தென்மகள் செம்புடைச் சிறுவிரல் வரித்த வண்டலுங் காணிரோ கண்ணுடையீரே.” |
(அகம்-275) |
வண்டலைக் காணார் தேஎத்து நின்று காணில் ஆற்றீரெனக் கூறினமையின் ஆயத்தினையகன்று இற்புறஞ் சென்று சேரியோர்க்கு உரைத்ததாயிற்று. |
“நிலந்தொட்டுப் புகாஅர் வான மேறார் விலங்கிரு முந்நீர்க் காலிற் செல்லார் நாட்டி னாட்டி னூரி னூரிற் குடிமுறை குடிமுறை தேரிற் கெடுநரு முளரோநங் காதலோரே.” |
(குறுந்-130) |
இது செவிலி தேடத் துணிந்தது. இக்குறுந்தொகையுள் நம்மாற் காதலிக்கப்பட்டாரென்றது. அவ்விருவரையும் தாயரு முள ரென்றதனாற் றந்தையும் தன்னையரும் வந்தால் இன்னது செய்வலென்றலும் உளவென்று கொள்க. |
“நுமர்வரி னோர்ம்பி னல்ல தமர்வரின் முந்நீர் மண்டிய முழுவது மாற்றாது” |
என்றாற் போல்வன அடி புறத்திடாதாள் புறம் போதலும் பிரிவென்றற்கு சேரியுங் கூறினார்; அஃது ஏம இல் இருக்கை யன்றாதலின். (37) |
சூத்திரம்: |
பாரதியார் |
40. ஏமப்போரூர்.................உளரே |
கருத்து:- இது, தலைவி உடன்போன வழி அவள் தாய்மார் அவளைத் தேடிச் செல்லுதலும் உண்டென உரைக்கின்றது. |