‘நோய் மிகப் பெருகித்தன் நெஞ்சு கலுழந்தோளை அழிந்தது களையென மொழிந்ததுகூறி, வன்புறை நெருங்கி வந்ததன் திறத்தொடு, என்றிவை எல்லாம் இயல்புற நாடின், ஒன்றித் தோன்றும் தோழிமேன’ என்பது தலைமகன் பிரிதலால் வந்துற்ற நோய் மிகவும் பெருகித் தன் நெஞ்சு கலங்கியோளை அழிந்தது களைதல் வேண்டுமெனத் தலைமகன் சொன்ன மாற்றத்தைக்கூறி வன்புறையின் பொருட்டு நெருங்கி வந்ததன் திறத்தோடு இத்தன்மையவெல்லாம் இயல்புற ஆராயின் தலைமகளொடு பொருந்தித் தோன்றும் தோழிமேலன என்றவாறு. |