பக்கம் எண் :

தலைவரும் விழும நிலையெடுத்து உரைப்பினும் சூ.42295

“எனவாங்கு;
இனைநலம் உடைய கானஞ் சென்றோர்
புனைநலம் வாட்டுநர் அல்லர் மனைவயின்
பல்லியும் பாங்கொத்து இசைத்தன
நல்எழில் உண்கணும் ஆடுமால் இடனே.”
1

(கலி-பாலை-11)
  

என வற்புறுத்தியவாறு கண்டு கொள்க.
  

‘என்றிவை  எல்லாம்  இயல்புற  நாடின்’   என்றதனான்,  பருவம்  வந்தது  எனவும்  பருவம்  அன்று
எனவும் வருவன கொள்க.
  

“வல்வருவர் காணாய் வயங்கி முருக்கெல்லாம்
செல்வச் சிறார்க்குப்பொன் கொல்லார்போல்-நல்ல
பவளக் கொழுந்தின்மேற் பொற்றாலி பாய்த்தித்
திவளக்கான் றிட்டன தேர்ந்து”
  

(திணைமாலைநூற்-66)
  

இது பருவம் வந்தது என்றது;
  

“மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை
கல்பிறங்கு அத்தஞ் சென்றோர் கூறிய
பருவம் வாரா அளவை நெறிதரக்
கொம்புசேர் கொடியிணர் ஊழ்த்த
வம்ப மாரியைக் காரென மதித்தே.” 
  

(குறுந் 66)

இது பருவம் அன்று என்றது.
  

இன்னும்  ‘என்றிவை  எல்லாம்’  என்றதனால், பிரியுங்காலத்துத் தலைமகட்கு உணர்த்துகின்றேன் எனத்
தலைமகற்கு உரைத்தலும், தலைமகட்கு அவர் பிரியார் எனக் கூறுதலும் கொள்க.
  

“முளவுமா வல்சி எயினர் தங்கை
இளமா எயிற்றிக்கு நின்நிலை அறியச்
சொல்லினேன் இரக்கும் அளவை
வென்வேல் காளை விரையா தீமே.”
  

(ஐங்குறு-364)

இது விலக்கிற்று.
  

“விலங்கல் விளங்கிழாஅய் செல்வாரோ அல்லர்
அழற்பட் டசைந்த பிடியை-எழிற்களிறு
  


1 இதனைத் தலைவி கூற்றென்பர் நச்சினார்க்கினியர்