பக்கம் எண் :

தலைவரும் விழும நிலையெடுத்து உரைப்பினும் சூ.42307

“இனைநல முடைய கானஞ் சென்றோர்
புனைநலம் வாட்டுந ரல்லர்; மனைவயின்
பல்லியும் பாங்கொத் திசைத்தன;
நல்லெழி லுண்கணும் ஆடுமா லிடனே.”
   

எனக்கூறி அழியும் தலைவியை ஆற்று வித்தல் காண்க.
  

“தண்கயத் தமன்ற வண்டுபடு துணைமலர்” எனும் மருதனிளநாகனார் அகப்பாட்டில் (அகம்-59)
  

“வருந்தினை வாழியர் நீயே;
... .... .... .... .... .... .... ... ... ... ...
தாம்பா ராட்டிய காலையு முள்ளார்
பிரிந்து சேணுறைநர் சென்ற வாறே,
புன்தலை மடப்பிடி உணீஇயர் அங்குழை
நெடுநிலை யாஅ மொற்றி நனைகவுள்
படிஞிமிறு கடியும் களிறே.”
   

என்று எடுத்துக்காட்டி அழியும் தலைவியைத் தோழி ஆற்றுவித்தலும் காண்க.
  

இனி,  ‘என்றிவை  எல்லாம்’  எனப் பொதுபடக் கூறுதலான், தோழி ‘இது பருவமன்று’ என்பது போன்று
கூற்றுகள் நிகழ்த்தி ஆற்றுவித்தலையுங் கொள்க. அதற்குச் செய்யுள் வருமாறு.
  

“மடவ மன்ற தடவு நிலைக் கொன்றை;
கல்பிறங் கத்தஞ் சென்றோர் கூறிய
பருவம் வாரா வளவை நெரிதரக்
கொம்புசேர் கொடியிண ரூழ்த்த,
வம்ப மாரியைக் காரென மதித்தே.”

(குறு-66)

சிவலிங்கனார்
  

இச்சூத்திரம்   உடன்போக்கின்கண்   தோழி   கூற்று   நிகழுமாறு   கூறுகின்றது.   நச்சினார்க்கினியர்
இக்கருத்தினரே.
  

இளம்பூரணரும்   பாரதியாரும்  உடன்போக்கின்  கண்ணும்  பொருள்வயிற்பிரிவின்  கண்ணும்  தோழி
கூற்று நிகழுமாறு கூறுகின்றது எனக்கொண்டனர்.
  

தலைவரு   விழும  நிலையெடுத்துரைப்பினும்  போக்கற்கண்ணும்  விடுத்தற்கண்ணும்  நீக்கலின்  வந்த
தம்முறுவிழுமமும் என்பதுவரை உடன்போக்கில் நிகழும் கூற்றுவகையென்றும்