பக்கம் எண் :

312தொல்காப்பியம் - உரைவளம்

மாகப்     போகின்றார்க்கு   வரும்   ஏதம்   அறிவித்தலும்:   ஊரது   சார்வும்   செல்லும்    தேயமும்
ஆர்வநெஞ்சமொடு   செப்பிய    கிளவியும்-எம்மூர்   அணித்தெனவும்   நீர்செல்லுமூர்   சேய்த்தெனவும்
அன்புடை  நெஞ்சத்தாற்  கூறுங்   கூற்றுகளும்,   புணர்ந்தார்   பாங்கில் புணர்ந்த நெஞ்சமொடு  அழிந்து
எதிர்கூறி  விடுப்பினும்  புணர்ந்து  உடன்  போய   இருவர்  கண்ணுந் தணவா  நெஞ்சினராகி ஆற்றாமை
மீதூர   ஏற்றுக்கொண்டு   நின்று   இனி    இதின்  ஊங்கப்   போதற்கரிது  நும்   பதிவயிற்  பெயர்தல்
வேண்டுமென்று   உரைத்து    மீட்டலும்;    ஆங்கு  அத்தாய்  நிலைகண்டு   தடுப்பினும்   விடுப்பினும்
அவ்விடத்துத்    தேடிச்சென்ற   அச்செவிலியது  நிலைகண்டு   அவளைத்   தடுத்து  மீட்பினும்   அவர்
இன்னுழிச்   செல்வரென   விடுத்துப்   போக்கினும்;  சேய்நிலைக்கு  அகன்றோர் செலவினும்-சேய்த்தாகிய
நிலமைக்கண்ணே   நீங்கின  அவ்விருவருடைய   போக்கிடத்தும்;   வரவினும்-செவிலியது   வரவிடத்தும்;
கண்டோர்   மொழிதல்   கண்டது   என்ப  -  இடைச்சுரத்துக்  கண்டோர் கூறுதல் உலகியல் வழக்கினுட்
காணப்பட்டதென்று கூறுவர் புலவர் என்றவாறு.
  

“எம்மூ ரல்ல தூர்நணித் தில்லை
வெம்முரட் செல்வன் கதிரு மூழ்ந்தனன்
சேந்தனை சென்மோ பூந்தார் மார்ப
இளையன் மெல்லியண் மடந்தை
அரிய சேய பெருங்க லாறே.”
  

(சிற்றடக்கம்)
 

இதனுட்  கதிரும்  ஊழ்த்தனனெனவே பொழுது சேறலும் பெருங்கலாறெனவே ஆற்றதருமையும்  பற்றிக்
குற்றங்காட்டியவாறு காண்க “எல்லுமெல்லின்று” என்னுங் குறுந்தொகைப் (390) பாட்டும் அது.
  

“நல்லோண் மெல்லடி நடையு மாற்றாள்
பல்கதிர்ச் செல்வன் கதிரு மூழ்த்தனன்
அணித்தாத் தோன்றுவ தெம்மூர்
மணித்தார் மார்ப சேந்தனை சென்மே.”
   

இஃது  எம்மூர்  அணித்தென்றதனாற்  சார்வும்  அதனானே செல்லுந் தேயஞ் சேய்த்தெனவுங் கூறிற்று.
மகட்பயந்து வாழ்வோர்க்கு இவளைக் கண்டு அருள் வருதலின் ஆர்வ நெஞ்சமென்றார்.