“நெருப்பவிர் கனலி யுருப்புச்சினந் தணியக் கருங்கால் யாத்த வரிநிழ லசைஇச் சிறுவரை யியப்பிற் காண்டி செறிதளிர்ப் பொன்னேர் மேனி மடந்தையொடு வென்வே லண்ணல் முன்னிய சுரனே.” |
(ஐங்குறு-388)
|
இவ் வைங்குறு நூறும் அது |
“அஞ்சுடர்நீள் வாண்முகத் தாயிழைவு மாறிலா வெஞ் சுடர்நீள் வேலானும் போதரக்கண் - டஞ்சி யொருசுடரு மின்றி யுலகுபா ழாக விருசுடரும் போந்தன வென்றார்.” |
(திணைமாலை நூற்-71) |
இஃது இடைச்சுரத்துக் கண்டோர் கூறிய வார்த்தையைக் கேட்டோராகச் சிலர் கூறியது |
“அழுந்துபட வீழ்ந்த தெருந்தண் குன்றத் தொலிவ லீந்தி னுலவை யங்காட் டாறுசொன் மாக்கள் சென்னி யெறிந்த செம்மறுத் தலைய நெய்த்தோர் வாய வல்லியம் பெருந்தலைக் குருளை மாலை மானோக்கு மீண்டிவ ரீங்கைய சுரனே வையெயிற் றையண் மடந்தை முன்னேற் றெல்லிடை நீங்கு மிளையோ னுள்ளங் காலொடு பட்ட மாரி மால்வரை மிளிர்க்கு முருமினுங் கொடிதே” |
(நற்றிணை-2) |
“காண்பா னவாவினாற் காதலன் காதலியின் னடவா நிற்ப நாண்பால் ளாதலா னன்னுதல் கேள்வன் பின் னடவாநிற்ப வாண்பான்மை குன்றா வயில்வே லவன்றனக்கு மஞ்சொ லாட்கும் பாண்பாலைவண்டினமும் பாவவருஞ்சுரமும் பதிபோன நன்யே” |
“மடக்கண் டகரக் கூந்தற் பணைத்தோன் வார்ந்த வாலெயிற்றுச் சேர்ந்துசெறி குறங்கிற் பிணைய லந்தழை தைஇத் துணையிலள் விழவுக்களம் பொலிய வந்துநின் றோளே யெழுமினோ வெழுமினங் கொழுநர்க் காக்கம் ஆரியர் துவன்றிப் பேரிசை முள்ளூர் |