பக்கம் எண் :

பொழுதும் ஆறும் உட்குவரத் தோன்றி சூ.43315

பலருடன் கழித்த வொள்வான் மலையன
தொருவேற் கோடி யாங்குநம்
பன்மைய தெவனோவிவ ணன்மைதலைப் படினே.”

(நற்றிணை-170)
 

இஃது  இடைச்சுரத்தும்  குறும்பினுள்ளோர்  இவரைக்கண்டு  கோள்  இழைப்புற்றாக்கு  அவர்பெண்டிர்
கூறியது இவை செலவின்கட் கூறியன.
  

“வில்லோன் காலன கழலே தொடியோண்
மெல்லடி மேலவுஞ் சிலம்பே நல்லோர்
யார்கொ லளியர் தாமே யாரியர்
கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி
வாகை வெண்ணெற் றொலிக்கும்
வெய்பயி லழுவ முன்னி யோரே.”
  

(குறுந்-7)

என்பதும் அது.
  

கடியான் கதிரெறிப்பக் கல்லளையில் வெம்பியவக்  

கலங்கற் சின்னீ  

ரடியானுலகளந்த வாழியா னாக்கிய  

வமிர்தென் றெண்ணிக்  

கொடியான் கொடுப்பக் குடங்கையிடங் கொண்டிருந்து  

குடித்துச் சென்ற  

வடியேர் தடங்கணவ் வஞ்சிக்கொம் பீன்றாரிவ்  

வருவோர் போலும்.”
   

“நமரே யவரெனி னன்ணினீர் சென்மி
னமர்வி லொராவ வதி யாய்நின் - றமரோ
விளக்கி னனையாளைத் தான் கண்டாள் கண்டேன்
களக்கனி வண்ணனை யான்.”
   

“அறம்புரி யருமறை நவின்ற நாவிற்
நிறம்புரி கொள்கை யந்தணிர் தொழுவலென்
றொண்டொடி வினவும் பேதையம் பெண்டே
கண்டென மம்ம சுரத்திடை யவளை
யின்றுணை யினிதுபா ராட்டக்
குன்றுயர் பிறங்கன் மலையிறந் தோளே.”

(ஐங்குறு-387)
 

இவை செவிலி வரவின்கட் கூறின.