“வில்லோன் காலன கழலே, தொடியோண் மெல்லடி மேலவுஞ் சிலம்பே, நல்லோர் யார்கொல் அளியர் தாமே, ஆரியர் கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி வாகை வெண்ணெற் றொலிக்கும் வேபயில் அழுவம் முன்னி யோரே.” |
(குறுந்-7) |
“பைங்காய் நெல்லி பலவுடன் மிசைந்து செங்கால் மராஅத்த வரிநிழல் இருந்தோர் யார்கொல்? அளியர் தாமே, வார்சிறைக் குறுங்கால் மகன்றில் அன்ன உடன்புணர் கொள்கைக் காத லோரே”. |
எனும் ஐங்குறு நூறு 381 மது, |
அழிந்தெதிர் கூறிவிடுத்தற்குச் செய்யுள்: |
“இதுநும் மூரே, யாவருங் கேளிர்; பொதுவறு சிறப்பின் வதுவையுங் காண்டும்; ஈன்றோர் எய்தாச் செய்தவம் யாம் பெற்றனமால் மீண்டனை சென்மோ.” |
(பொருள்-40சூ மேற்கோள்) |
தாய்நிலை கண்டு கொண்டார் தடுத்தற்குச் செய்யுள்: |
“பெயர்ந்து போகுதி பெருமூ தாட்டி! சிலம்புகெழு சீறடி சிவப்ப இலங்குவேற் காளையொடு இறந்தனன் சுரனே”. |
தாய்நிலை கண்டு விடுத்தற்கு மேற்கோள்: |
“நெருப்பவிர் கனலி உறுப்புச்சினந் தணியக் கருங்கால் யாத்து வரிநிழ லிரீஇ சிறுவரை இறப்பிற் காண்குவை செறிதொடிப் பொன்னேர் மேனி மடந்தையொடு வென்வேல் விடலை முன்னிய சுரனே”. |
(ஐங்குறு-388) |
சேய் நிலைக்கன்றோர் செலவிற் கண்டோர் கூறும் கூற்று: |
“செய்வினைப் பொலிந்த செறிகழல் நோன்தாள் மையணற் காளையொடு பைய வியலிப் |