பக்கம் எண் :

22தொல்காப்பியம் - உரைவளம்

நம்பி 6. இல. வி. பொருள். 379
  

குறிஞ்சி பாலை முல்லை மருதம்
நெய்தல் ஐந்திணைக்கு எய்திய பெயரே

  

தொன். 174, முத்து அக.8.
  

முல்லை குறிஞ்சி பாலை மருதம்
நெய்தல் ஐந்திணைக்கு எய்திய பெயரே

  

2. அவற்றுள், ..... ... பண்பே
  

இது மேற்சொல்லப்பட்ட எழுதிணையுள், நிலம்பெறுவன வரையறுத்து உணர்த்துதல் நுதலிற்று.
  

(இ-ள்) அவற்றுள் - மேற்சொல்லப்பட்ட  எழுதிணையுள்,  நடுவணது  ஒழிய - நடு  எனப்பட்ட பாலை
ஒழிய,  நடுவண்  ஐந்திணை  -  (கைக்கிளை பெருந்திணைக்கு)  நடுவணதாகி  நின்ற  ஐந்திணை, படுதிரை
வையம் பாத்திய பண்பு - ஒலிக்கின்ற திரை கடல் சூழ்ந்த உலகம் பகுக்கப்பட்ட இயல்பு.
  

இதனாற்  சொல்லியது  எழுவகைத்திணையினும்  நிலம்பெறுவன  நான்கு  என்றவாறாயிற்று.  நடுவணது
பாலை என்று எற்றாற் பெறுதும் எனின், வருகின்ற சூத்திரங்களுள்,
  

‘முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல்’.

(அகத் - 5)
 

என   நிலம்   பகுத்து   ஓதினமையின்1,   நடுவணது   பாலை   எனக்  கொள்ளப்படும்.  நடுவு  நிலைத்
திணையெனினும் பாலை எனினும் ஒக்கும், பாலை என்னுங் குறியீடு எற்றாற்பெறுதும் எனின்,
  


1. நிலம்  பகுத்து   ஓதிப்  பாலைக்கு   நிலம்  பகுத்து  ஓதாது  விட்டமையால் குறிஞ்சி முதலியவற்றின்
நடுவிருப்பது பாலை எனக் கொள்ளப்பட்டது.