பக்கம் எண் :

அகத்திணையியல் சூ.223

‘வாகை தானே பாலையது புறனே’.

 (புறத்-15)
  

என்பதனாற்    பெறுதும்2   இச்சூத்திரத்துள்   ஒழிய  என்னும்  வினையெச்சம் எவ்வாறு முடிந்தது எனின்,
அது பாத்திய என்னும் பெயரெச்சத்தோடு  முடிந்தது.  அப்பெயரெச்சம்  பண்பு  என்னும்  பெயர்கொண்டு
ஐந்திணை என்னும் எழுவாய்க்குப் பயனிலையாகி நின்றது என உரைப்ப.
  

இவ்வாறு  உரைப்பவே,  ஐந்திணை  பண்பு  என  வரூஉங்காலத்துப்  பயன்பட3 நில்லாமையின் அஃது
உரையன்று என்பார் உரைக்குமாறு:- ஒழிய என்பதனை எச்சப்படுத்தாது முற்றுப்படக்கூறி.
  

“படுதிரை   வையம்   பாத்திய   பண்பு  நடுவண  தொழிய”  எனப்  பொருள்  உரைப்ப.  அஃதேல்
வினையெச்ச வாய்பாட்டால் வரும் முற்றுளவோ எனின்,
  

“வினையெஞ்சு கிளவியும் வேறுபல் குறிய.”4 (எச்ச-59) என்று முற்று வாய்பாட்டால் வினையெச்சம்
வருதலின்  வினையெச்ச  வாய்பாட்டால்   முற்று    வரும்   என்பதூஉம்   அச்சூத்திரத்தின் அமைத்துக்
கொள்ளப்படும் என்ப. இவ்வுரை இரண்டினும் ஏற்பது அறிந்து கொள்க.
  

*‘நடுவண்  ஐந்திணை’  என்பன   யாவை  எனின்,  முல்லை,  பாலை,  மருதம், நெய்தல் என்பனவாம்.
எற்றுக்கு? இந்நூல்
  


2. வாகைதானே   நடுவணது   புறனே   என்பதற்குப்   பதிலாகப்  பாலையது  புறனே  என்பதனால்
நடுவணது பாலை என்பது பெறப்படும்.

3. பயன்பட  -  எழுவாய்  பயனிலைத்   தொடர்  பொருள்பட, (பண்பு என்பதைப் பண்பு ஆம் எனக்
கொள்ளின் நன்று).

4. இச்சூத்திரம் வினைமுற்று எச்சமாகும் என்பதற்குக் கூறப்பட்டது.

*”நடுவண்............ஆணாம் என்க” - விளக்கம்.