கன்றவர் குழீஇய அளப்பருங் கட்டூர்ப் பருந்துபடப் பண்ணிப் பழையன் பட்டெனக் கண்டது நோனான் ஆகித் திண்டேர்க் கணையன் அகப்படக் கழுமலந் தந்த பிணையலங் கண்ணிப் பெரும்பூண் சென்னி அழும்பில் அன்ன அறாஅ யாணர்ப் பழம்பல் நெல்லின் பல்குடிப் பரவைப் பொங்கடி படிகயம் மண்டிய பசுமிளைத் தண்குட வாயில் அன்னோள் பண்புடை ஆகத் தின்றுயில் பெறவே.” |