போலக் கொள்க. 16 இது வாரியுள்17 யானை காணவும். நாடு காணவும், புனலாடவும், கடவுளரை வழிபடவும் பிரியும் பிரிவு18 ஒரு பக்கம் நாட்டெல்லையிலிருந்து பகைவரைக் காக்க வேண்டிப் பிரிவது பகைவயிற் பிரிவின் அடங்குதலின், அஃததன் உண்மைக்கண் பிரியும் பிரிவு என்று ஓதப்பட்டது. |
பரத்தையின் அகற்சியின் என்பது, பரத்தையரிற் பிரியும் பிரிவின் கண்ணும் என்றவாறு. உம்மை எஞ்சி நின்றது.19 |
பிரிந்தோள் குறுகி இரத்தலும்20 தெளித்தலும்21 என இரு வகையோடு என்பது, பிரியப்பட்ட தலைமகளைக் குறுகி, இரத்தலும் தெளித்தலும் ஆகிய இரண்டு வகையோடே கூட என்றவாறு. |
காவற் பாங்கின் ஆங்கோர் பக்கத்தினும் பரத்தையின் அகற்சியினும் பிரியப் பட்டார் எனக்கூட்டுக. அஃதேல் பரத்தையின் அகற்சி ஊடலாகாதோ வெனின், ஊடலின் மிக்க நிலையே ஈண்டுக் கூறுகின்றதெனக் கொள்க. |
கடவுள் மாட்டுப் பிரிந்துவந்த தலைமகனைத் தலைமகள் புணர்ச்சி மறுத்தற்குச் செய்யுள். |
மருதக்கலியுள் கடவுட்22 பாட்டினுள், |
“வண்டூது சாந்தம் வடுக்கொள நீவிய தண்டாத்தீஞ் சாயல் பரத்தை வியன்மார்ப பண்டின்னை யல்லைமண் ஈங்கெல்லி வந்நீயக் கண்ட தெவன்மற் றுரை: நன்றும். |
16 நின்னிடத்துவரும் நெஞ்சு எனப்பொருள் கொள்ளுதல் போல |
17 வாரி - யானையைப் பிடிக்கத்தோண்டப்படும் குழி |
18 “இது வாரியுள்... ... ... பிரியும் பிரிவு” இத்தொடர் இங்குப் பொருந்த வில்லை. |
19 அகற்சியினும் என்றது அகற்சியின் என உம்மை எஞ்சியது. |
20 வாயில் மூலம் இரத்தல். |
21 தன் தவறின்மை கூறித் தெளிவித்தல் |
22 கடவுள்-முனிவர். |