ஊக்கிய பாலெனப் பொருட் பிரிவில் தலைவன் உள்ளத்தில் நிகழும் விருப்பு தடையுணர்ச்சி முரண் வலியுறுத்தப்பட்டது. |
‘உரைத்திற நாட்டம் கிழவோன்மேன’ என்பதை அப்பாற் பட்ட ஒரு திறத்தானும்; ஒன்றாப் பொருள்வயின் ஊக்கிய பாலினும், ஊதியங்கருதிய ஒருதிறத்தானும், தூதிடையிட்ட வகையினானும், மூன்றன் பகுதியும், வினைத்திறவகையினும், ஆங்கோர் பக்கமும், இரத்தலும், தெளித்தலும் எனவரும் ஒவ்வொன்றோடும் தனித்தனி கூட்டுக. |
பொருள், ஓதல், தூது, பகை, காவல், பரத்தை என அறுவகைப்பிரிவும் வகைபெறக்கூறும் இச்சூத்திரத்தில் முதல் மூன்றையும் ‘மூன்றவன் பகுதியு’ மெனத் தொகுத்துப் பிரித்தார்; மற்ற மூன்றில் பகை காவலாகிய இரண்டும் தன்னளவிலும் பரத்தை தலைவி அளவிலும் பகைமை சுட்டுதலால் அம்மூன்றையும் வேறாக்கி, எண்ணும்மைகளை எல்லாம் இறுதியில் ஒடுக்கொடுத்துக் கூட்டிப் பிரிவுவகை ஆறும் விளக்கப்பட்டுள. |
ஒன்றாத் தமரினும், பருவத்தும், சுரத்தும் என்பவற்றுள் ஒவ்வொன்றின் கண்ணும் தலைவன் வலித்தலும் இயல்பாகும். அவை வருமாறு :- ஒன்றாத்தமர் உடன்படுமாறு தலைமகன் சான்றோரை விடுத்தது கேட்ட தோழி கூற்றாகவரும். |
“எக்கர் ஞாழல் சிறியிலைப் பெருஞ்சினை ஓதம் வாங்குந் துறைவன் மாயோள் பசலை நீக்கின னினியே.” |
என்னும் ஐங்குறு நூற்று (145) செய்யுளால், தலைதமர் மகட்கொடைக்கு ஒன்றாவழித்தலைவன் உடன்கொண்ட கழியத் துணிதலுண்மை விளங்கும். |
“பெருநன் ருற்றிற் பேணாரு முளரே. ஒருநன் றுடைய ளாயினும் புரிமாண்டு புலவி தீர வளிமதி இலைகவர் பாடமை யொழுகிய தண்ணறுஞ் சாரன் மென்னடை மரையா துஞ்சு நன்மலை நாட! நின்னல திலளே.” |
(குறுந்-115) |