இக்குறுந்தொகைச் செய்யுளில், ‘நன்மலை நாட நின்னலதிலளே’ எனத்தோழி தலைவற்குக் கூறுதலால் தலைவனுக்குத் தலைவியைத்தரத் தமர் ஒன்றாமையும் அதனால் தலைவன் கொண்டு தலைக்கழிய வலித்தலும் கூறப்பட்டது.1 |
இனி, மணமறுத்த ஒன்றாத்தமரை உடன்படுத்தற் பொருட்டுப் பொருளீட்டக் கருதித் தலைவியை விடுத்துப் பிரிவதற்குச் செய்யுள்: |
“இலையிலஞ்சினை” எனும் (254-ஆம்) குறும்பாட்டில், |
“வாரா, தோழி- - - - - - செய்பொருள் தால்நசைஇச் சென்றோர் எய்தின ராலென வரூஉந் தூதே.” |
எனப்பொருள் தேடித் தரச் செல்லும் தலைவன் பிரிவு கூறப்படுதலறிக. |
“பொத்தில் காழி” எனும் (255) குறும்பாட்டிலும், |
“தங்கடனிறீஇய ரெண்ணி யிடந்தொறும் காமர் பொருட்பிணிப் போகிய நாம்வெங் காதலர் சென்றவாறே.” |
எனத் தலைவன் பொருட்பிரிவு3 வருதலறிக.2 |
அப்பிரிவில் தலைவன் கூற்றுக்குச் செய்யுள் வந்துழிக் கண்டு கொள்க. |
உடன்போக்கில் வலித்துக்கொண்டு செல்லும் தலைவன் தலைவிக்குச் சுரத்திடக் கூறுவதற்குச் செய்யுள்: |
“அழிவில முயலும் ஆர்வ மாக்கள் வழிபடு தெய்வம் கட்கண் டாஅங் |
1 புலவி தீர அனிமதி, ‘நின்னலது இவள்’ என்பனவற்றால் உடன்போக்கை வற்புறுத்தி ஓம்படை கூறியது என்க. |
2 செய்யுளில் வருதலறிக. |
3 தங்கடன் நிறீஇயர் எண்ணி என்றது தாமீட்டிய பொருளால் வரைதல் தம் கடன் என்பதை நிறுத்த எண்ணி எனப் பொருள்படலால் பொருள் வயிற் பிரிவைக் குறித்தது என்பது இவர் கருத்து. |