பக்கம் எண் :

354தொல்காப்பியம் - உரைவளம்

இதில், முன் தலைவன் செய்ததைத் தோழி கொண்டு கூறியதாகக் காண்கின்றோம்.
   

“வினையமை பாவையி னியலி நுந்தை
மனைவரை யிறந்து வந்தனை யாயிற்
றலை கெதிரிய தன்பெய லெழிலி
அணிமிகு கானத் தகன்புறம் பரந்த
கடுஞ்செம் மூதாய் கண்டுங் கொண்டு
நீவிளை யாடுக சிறிதே; யானே
மழகளி றுரிஞ்சிய பராரை வேங்கை
மணலிடு மருங்கின் இரும்புறம் பொருந்தி
அமர்வரின் அஞ்சேன், பெயர்க்குவென்;

நுமர்வரின் மறைகுவென், மாஅ யோளே”.
   

எனும்     நற்றிணை  (362)  செய்யுளுமது.  இதில்  தேடிப்பின்வந்த  தலைவி  தமர்க்கு  ஊறு  செய்யாது
அருளான்  ஒளிக்கும்  தலைவன் தானே  கூறியதும்  அறிக.  கற்பொடு  புணர்ந்த கௌவைக்குத் தலைவன்
கூற்றாகச் செய்யுள்வரின் கண்டுகொள்க.
  

இனி,   இதில்   நாளது  சின்மை,  தாளாண்பக்கம்  இன்மையினிளிவு அன்பினதகலம், எனும் நான்கும்
பொருள்   தேடத்தூண்டுதலும்,   அபபொருட்பிணியை    முறையே   இளமையதருமை,   தகுதியதமைதி,
உடைமையது  (காதல்)   உயர்ச்சி,   அகற்சிய   தருமை  எனும்   நான்கும் இன்பவிழைவால் தகைப்பதும்
கூறப்படுகிறது.
  

நாளது   சின்மை  பொருள்தேட  வலித்தலும்,  அப்பொருட்பிணி  தகைக்கும்   இன்பநுக  ரிளமையுந்,
தம்முள் ஒன்றாமைக்குச் செய்யுள்:
  

“புணரிற் புணராது பொருளே; பொருள்வயிற்
பிரியிற் புணராது புணர்வே; ஆயிடைச்
செல்லினும் செல்லா யாயினும் நல்லதற்
குரியை வாழியென் னெஞ்சே; பொருளே
வாடாப் பூவின் பொய்கை நாப்பண்
ஓடுமீன் வழியிற் கெடுவ; யானே
விழுநீர் வியலகந் தூணி யாக