எழுமா ணளக்கும் விழுநிதி பெறினும், கனங்குழைக் கமர்த்த சேயரி மழைக்கண் அமர்ந்தினிது நோக்க மொடு செகுத்தனென்; எனைய வாகுக வாழிய பொருளே.” |
(நற்றிணை-16) |
“வங்காக் கடந்த செங்காற் பேடை எழாலுற வீழ்ந்தெனக் கணவற் காணாது குழலிசைக் குரல குறும்பல அகவும் குன்றுறு சிறுநெறி அரியவென் னாது மறப்பருங் தாதலி யொழிய இறப்பல் என்பதீண் டின்மைக்கு முடிவே.” |
(குறுந்-151) |
எனும் குறுந்தொகைச் செய்யுளுமது. |
பொருள் வலிக்கும் நெஞ்சுக்கு அதனொடு பொருந்தா |
இளமையதருமை தலைவன் கூறற்குச் செய்யுள்: |
‘பைங்காய் நல்லிட மொரீஇ’ என்னும் நற்றிணைச் செய்யுளில், |
“..........................பாழ்நாட் டத்தம் இறந்துசெய் பொருளும் இன்பம் தருமெனில் இளமையிற் சிறந்த வளமையு மில்லை, இளமை கழிந்த பின்றை வளமை காமந் தருதலு மின்றே; அதனால் நில்லாப் பொருட் பிணிச் சேறி வல்லே நெஞ்சம் வாக்கநின் வினையே.” |
(நற்-126) |
எனத்தலைவன் கூறுதல் காண்க. இன்னும், ‘அருவியார்க்கும்,’ எனும் நற்றிணைச் (205) செய்யுளில், |
“துன்னருங் கானம் என்னாய் நீயே; குவளை யுண்கண் இவளீண் டொழிய ஆள்வினைக் ககறி யாயின், இன்றொடு போயின்று கொல்லோ தானே.............. ஆய்நிறம் புரையுமிவள் மாமைக் கவினே.” |
என வருவது மது. |