பக்கம் எண் :

356தொல்காப்பியம் - உரைவளம்

“முதிர்ந்தோ ரிளமை ஒழிந்தும் எய்தார்;
வாழ்நாள் வகையளவு அறிஞரு மில்லை;

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...

கருங்கண் வெம்முலை ஞெழங்கப் புல்லிக்
கழிவதாக கங்குல்.”
  

(நற்-314)
 

என்று    தலைவன்  கூறியதைத்   தலைவி  எடுத்துக்   கூறும்  செய்யுளில்  இளமையதருமையும்  நாளது
சின்மையும் தம்முள் ஒன்றாது முரணுதலைக் காண்க.
  

தாளாண்மையால்  பொருள்  வலிக்கும்   நெஞ்சிற்குத்தலைவி  தகுதி  நோக்கித்  தலைவன் பிரிவருமை
கூறுதற்குச் செய்யுள்
  

“வினையே ஆடவர்க் குயிரே, வாணுதல்
மனையுறை மகளிர்க் காடவ ருயிரென
நமக்குரைத் தோரும் தாமே;

அழாஅல், தோழி! அழுங்குவர் செலவே.”
   

இக் குறுந்தொகை  (135)   செய்யுளில்   தோழிகொண்டு   கூறிய    தலைவன்   கூற்றால்,  ஆடவர்க்குத்
தாளாண்பக்கம்   இன்றிய   மையாதென்பதும்,  மனையற   மகளிரின்   தகுதி   பேணுதல்   அவ்வாடவர்
கடனென்பதும்,  இவ்வாறு  இரு   வேறுணர்ச்சி   தம்முள் ஒன்றாப்  பொருட்பிணியின் கண்  தலைவற்குக்
கூற்று நிகழுமென்பதும் காண்க.
  

இன்னும்
  

“ஆறுசெல் வருத்தத்துச் சீறடி சிவப்பவும்
சினைநீங்கு தளிரின் வண்ணம் வாடவுந்
தான்வரல் துணிந்த இவளினும், இவளுடன்
வேய்பயில் அழுவம் உவக்கும்
பேதை நெஞ்சம் பெருந்தக வுடைத்தே.”
  

(பொருள்-சூ-41. நச்சினார்-உரைமேற்கோள்)
 

என்னும்   பொருளதிகாரச்   சூத்திரம்  41ன்   உரைமேற்கோள் செய்யுளாலும், ஒன்றாப் பொருட்பிணியில்
தலைவியின் பிரிவருமை தலைவன் கூறுவதறிக.
  

இனி, இன்மைய திளிவும் உடைமையை துயர்ச்சியும் கருதித் தலைவன் கூறுதற்குச் செய்யுள்:
  

“ஈதலும் துய்த்தலும் இல்லோர்க் கில்லெனச்
செய்வினை கைம்மிக எண்ணுதி; அவ்வினைக்