பக்கம் எண் :

ஒன்றாத் தமரினும் பருவத்தும் சுரத்தும் சூ.44357

கம்மா அரிவையும் வருமோ!
எம்மை யுய்த்தியோ! உரைத்திசி னெஞ்சே”
  

(குறுந்-63)
 

இச்செய்யுளில்  ‘இல்லோர்க்கில்லெனச்  செல்வினை   கைம்மிக  எண்ணுதி’  என்பதால்  இன்மையதிளிவும்,
‘அம்மா  அரிவையும்  வருமோ’ என்றதால்  உடைமையாம்  காதலின்  உயர்வும்,  தம்முள் ஒன்றாமை தன்
நெஞ்சிற்குத் தலைவன் கூறிச்செலவு தவிர்வது காண்க.
  

இனி, இவ்வாறு செலவழுங்காமல் தலைவன் பிரிதலும உண்டு: அதற்குச் செய்யுள்:
  

“இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும்
அசையுட னிருந்தோர்க் கரும்புணர் வின்மென
வினைவயிற் பிரிந்த வேறுபடு கொள்கை,

அரும்பவி ழலரிச் சுரும்புண் பல்போ
தணிய வருதுநின் மணியிருங் கதுப்பென-

எஞ்சா வஞ்சினம் நெஞ்சுணக் கூறி.

மைசூழ் வெற்பின் மலைபல இறந்து
செய்பொருட் ககன்ற செய்தீர் காதலர்
கேளார் கொல்லோ, தோழி!

... ... ... ... ... ... ... ... ... ... ... ...
...............கார்ப் பெயற் குரலே.”

   

எனவரும்  நற்றிணைச் (214)  செய்யுளில்   இவ்வாறு   ஒன்றாப்   பொருள்வயின்  மாறுபட்டலைக்கும்
உணர்ச்சி முரண் கூறித் தலைவன் ஒன்றாப்  பொருள்வயிற் பிரிந்தமையும் காண்க.  “அரிதாய  அறனெய்தி
அருளியோர்க்களித்தலும்” எனும் பாலைக் கலியுமதுவே. (பாலைக்கலி-11)
  

அன்புமிகையால்     மனைமாட்சிக்குப்    பொருள்    வலித்தலும்    தலைவியிற்    பிரிவருமையால்
செல்லத்துணியாமையுமாகிய ஒன்றாப் பொருட்பிணிக்குச் செய்யுள்:
  

“மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை
இரும்பனம் பசுங்குடை பலவுடன் பொதிந்து