பக்கம் எண் :

358தொல்காப்பியம் - உரைவளம்

பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன
நறுந்தண்ணியளே; நன்மாமேனி
புனற்புணையன்ன சாயிறைப் பணைத்தோள்
மணத்தலும் தணத்தலு மிலமே;

பிரியின் வாழ்தல் அதனினு மிலமே.”

(குறுந்-168)
 

“மல்குசுனை உலர்ந்த நல்கூர் சுரமுதல்
குமரி வாகைக்கோலுடை நறுவீ
மடமாத் தோகைக் குடுமியிற் றோன்றும்
கான நீளிடைத்தானும் நம்மொ
டொன்றுமணம் செய்தன ளிவளெனில்
நன்றே நெஞ்சம் நயந்தநின் துணிவே.”
   

என்ற   குறுந்தொகை   (347)   பாட்டிலும்,     அன்பினதகலமும்    அகற்சிய    தருமையும்   ஒன்றாப்
பொருள்வயின் ஊக்குதல் உணர்க.
  

இனிஓதற் பிரிவில் கூற்று நிகழ்தற்குச் செய்யுள்:
  

“பொய்யற்ற கேள்வியாற் புரையோரைப் படர்ந்துநீ
மையற்ற படிவத்தான் மறுத்தரல் ஒல்வதோ?

தீங்கதிர் மதியேய்க்கும் திருமுகம், அம்முகம்
பாம்புசேர் மதிபோலப் பசப்பூர்ந்து தொலைந்தக்கால்.”
   

என்னும்    பாலைக்கலித்    (14)    தாழிசையில்  ‘வாயின்வகுத்த  கல்விப்  பகுதியின்   ஊதியங்கருதிய’
தலைவன் பிரிவருமை காண்க.
  

“பின்னிய தொடர்நீவிப் பிறர்நாட்டுப் படர்ந்துநீ
மன்னிய புணர்ச்சியான் மறுத்தரல் ஒல்வதோ?

புரியவிழ் நறுநீலம் புரையுண்கண் கலுழ்பானாத்
திரியுமிழ் நெய்யேபோற் றெண்பனி யுறைக்குங்கால்”
   

என்பதால்,   ‘கையின்  வகுத்த   கல்விப்பகுதியின்   ஊதியங்   கருதித்’  தலைவன்  பிரிந்தமை  அறிக.
இப்பிரிவுகளில் தலைவன் கூற்று வந்துழிக் கண்டு கொள்க.
  

புகழும் மானமும் எடுத்து வற்புறுத்தும் தலைவன் கூற்றுக்குச் செய்யுள்:
  

“நாளும் நாளும் ஆள்வினை யழுங்க
இல்லிருந்து மகிழ்வோர்க் கில்லையாற் புகழென-