இனி, பாசறைப் புலம்பல் வருமாறு: |
“புகழ்சால் சிறப்பிற் காதலி புலம்பத் துறந்துவந் தனையே, அருந்தொழிற் கட்டூர் நல்லேறு தழீஇ நாகுபெயர் காலை உள்ளு தொறுங் கலிழு நெஞ்சம்! வல்லே எம்மையும் வரவிழைத் தனையே.” |
(ஐங்-445) |
வினை முற்றிய தலைமகன் பாகனொடு விரும்பிக் கூறுதற்குச் செய்யுள்: |
“விருந்தின் மன்னர் அருங்கலம் தெறுப்ப வேந்தனும் வெம்பகை தணிந்தனன் தீம்பெயற் காரு மார்கலி தலையின்று; தேரும் ஓவத் தன்ன கோபச் செந்நிலம் வள்வா யாழி உள்ளுறு புருளக் கடவுக, காண்குவம், பாக!... ... ...” |
(அகம்-54) |
காவலுக்குப் பிரிந்த தலைவன் தான் வருவதாய்த் தலைவிக்குத் தூதனுப்பியது:-“ஒருகுழை ஒருவன் போல” என்னும் பாலைக்கலியில், |
“ஒல்குபு நிழல் சேர்ந்தார்க் குலையாது காத்தோம்பி வெல்புகழ் உலகேத்த விருந்துநாட் டுறைபவர் - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - நம் காதலர் வருமென வந்தன்றவர் வாய்மொழித் தூதே.” |
(கலி-25) |
இனி, பரத்தையினகற்சியில் பரிந்த தலைமகளிடத்துத் தலைவன் இரத்தலும், தெளித்தலும் என இருவகையினும் கூற்று நிகழ்தற்குச் செய்யுள்: |
‘ஒரூஉ, கொடியியல் நல்லார்’ என்னும் மருதக்கலியில், |
“ஆயிழாய் நின்கண் பெறினல்லால் இன்னுயிர் வாழ்கல்லா என்கண் எவனோ தவறு” |
எனவும், |
“அதுதக்கது, வேற்றுமை என் கண்ணே ஓராதி தீதின்மை தேற்றக்கண் டீயாய் தெளிக்கு;” |
(மருதக்கலி-88) |