பக்கம் எண் :

362தொல்காப்பியம் - உரைவளம்

மகட்கும்  பாங்கற்கும்  பார்ப்பார்க்கும்  பாணர்க்கும்  கூத்தர்க்கும்   உழையோர்க்கும்  கூற்று   நிகழுமாறு
உணர்த்துதல் நுதலிற்று.
  

(இ-ள்) எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இல-முன்னர்க்கூறாது எஞ்சி நின்றார்க்கும் கூற்று ஒழிதல் இல.
  

‘பாங்கர்   முதலாயினாரை  இச்சூத்திரத்தாற்  கூறுப;  தலை  மகள் கூற்றுத் தனித்துக் கூறல் வேண்டும்,
இவரோடு,  ஒரு  நிகரன்மையின்,  ‘எனின்,  ஒக்கும்.   தலைமகள்   கூற்று   உணர்த்திய சூத்திரம் காலப்
பழமையாற்  பெயர்த்தெழுதுவார்  விழ   எழுதினார்   போலும்.  ஆசிரியர் இச்சூத்திரத்தானும்   பொருள்
கொள்ளவைத்தமையின்,  தலைமகள்  கூற்று  வருமாறு. தலைமகள்  பிரிதலுற்ற  தலைமகன் குறிப்புக்கண்டு
கூறுதலும்  பிரிவுணர்ந்து   கூறுதலும்,   பிரிவுணர்த்திய   தோழிக்குக்  கூறுதலும்,  உடன் போவல் எனக்
கூறுதலும்,   இடைச்சுரத்து   ஆயத்தார்க்குச்    சொல்லிவிட்டனவும்,    தமர்வந்துற்றவழிக்    கூறுதலும்
மீளலுற்றவழி  ஆயத்தார்க்குக் கூறிவிட்டனவும்,  பிரிவாற்றாமையும்,  ஆற்றுவல்  என்பது  படக் கூறுதலும்,
தெய்வம்   பராவலும்,   பருவங்கண்டு  கூறுதலும்  வன்புறை   எதிரழிந்து   கூறுதலும்   இவையெல்லாம்
கூறப்படும்.
  

பிரியலுற்ற தலைமகன் குறிப்புக்கண்டு கூறியதற்குச் செய்யுள்.
  

“நெஞ்சு நடுக்குறக் கேட்டுங் கடுத்தும்தாம்
அஞ்சிய தாங்கே அணங்காகும் என்னும் சொல்
இன்தீங் கிளவியாய் வாய்மன்ற நின்கேள்
புதுவது பன்னாளும் பாராட்ட யானும்
இதுவொன் றுடைத்தென எண்ணி அதுதேர
மாசில்வண் சேக்கை மணந்த புணர்ச்சியுட்
பாயல்கொண்டு என்தோள் கனவுவார் ஆய்கோல்
தொடிநிரை முன்கையாள் கையாறு கொள்ளாள்
கடிமனை காத்தோம்ப வல்லுவள் கொல்லோ
இடுமருப் பியானை யிலங்குதேர்க் கொடும்
நெடுமலை வெஞ்சுரம் போகி நடுநின்றெம்
செய்பொருண் முற்றும் அளவென்றார் ஆயிழாய்
தாமிடை கொண்ட ததுவாயின் தம்மின்றி
யாமுயிர் வாழும் மதுகை இலேமாயில்
தொய்யில் துறந்தார் அவர்எனத் தம்வயின்
நொய்யார் நுவலும் பழிநிற்பத் தம்மொடு
போயின்று சொல்லென் உயிர்”.

(கலி-பாலை-23)