பக்கம் எண் :

364தொல்காப்பியம் - உரைவளம்

செலவயர்ந் திசினால் யானே
அலர்சுமந் தொழிகஇவ் வழுங்கல் ஊரே”.

(நற்றிணை-149)
 

இடைச்சுரத்து ஆயத்தார்க்குச் சொல்லிவிட்டதற்குச் செய்யுள்
   

“சேட்புல முன்னிய விரைநடை அந்தணிர்
நும்மொன் றிரந்தனென் மொழிவல் எம்மூர்
யாய்நயந் தெடுத்த ஆய்நலங் கவின
ஆரிடை இறந்தனள் என்மின்
நேரிடை முன்கைஎன் ஆயத் தோர்க்கே”
 

(ஐங்குறு-384)
 

“கடுங்கட் காளையொடு நெடுந்தேர் ஏறிக்
கோள்வல் வேங்கைய மலைபிறக் கொழிய
வேறுபல் அருஞ்சுரம் இறந்தனள் அவளெனக்
கூறுமின் வாழியோ ஆறுசெல் மாக்கள்
நற்றோள் நயந்துபா ராட்டி
எற்கெடுத் திருந்த அறனில் யாய்க்கே.”
  

(ஐங்குறு-385)
 

தமர் வந்துற்றவழிக் கூறியதற்குச் செய்யுள்
  

“அறஞ்சா லியரோ அறஞ்சா லியரோ
வறனுண் டாயினும் அறஞ்சா லியரோ
வாள்வனப் புற்ற அருவிக்
கோள்வல் என்னையை மறைத்தகுன்றே.”
  

(ஐங்குறு-312)
 

மீண்டு வருவாள் ஆயத்தார்க்குக் கூறிவிட்டதற்குச் செய்யுள்
  

“கவிழ்மயி ரெருத்திற் செந்நா யேற்றை
குருளைப் பன்றி கொள்ளாது கழியும்
சுரநனி வாரா நின்றனள் என்பது
முன்னுற விரைந்தநீர் உரைமின்
இன்னகை முறுவல் என்ஆயத் தோர்க்கே.”
  

(ஐங்குறு-397)