பக்கம் எண் :

368தொல்காப்பியம் - உரைவளம்

“காலே பரிதப் பினவே கண்ணே
நோக்கி நோக்கி வாளிழந் தனவே
யகலிரு விசும்பின் மீனினும்
பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே”.
  

(குறுந்-44)
 

இது குறுந்தொகை, செவிலி கடத்திடைத் தன்நெஞ்சிற்குச் சொல்லியது.
   

“இடிதுடிக் கம்பலையு மின்னாத வோசையு மிசையினாராக்
கடுவினை யாளர் கடத்திடைப் பைங்குரவே கவன்று நின்றாப்
நெடுவினை மேற்செய்த வெம்மேபோ னீயும்
படுசினைப் பாவை பறித்துக் கேட்பாட்டாயோ பையக் கூறாய்”.

 

இது செவிலி குரவொடு புலம்பியது.
   

“தான்றாயாக் கோங்கந் தளர்ந்து முலைகொடுப்ப
வீன்றாய் நீ பாவை யிருங்குரவே-யீன்றாண்
மொழிகாட்டா யாயினு முள்ளெயிற்றாள் சென்ற
வழிகாட்ட யீதென்று வந்து”.
  

(திணை-மாலை-நூற்-65)
 

இது குரவே வழிகாட்டென்றது.
   

“குடம்புகாக் கூவல் குடிக்காக்குஞ் சின்னீ
ரிடம்பெறா மாதிரி மேறாநீ ரத்த
முடம்புணர் காத லுவப்ப விறந்த”
   

தடம்பெருங் கண்ணிக்கு யான்றாமையை காண்க.
 

இது  நீயாரென்று  வினாயினார்க்குச்  செவிலி  கூறியது இன்னும் வேறுபட வருவனவெல்லாம் இதனான்
அமைத்துக் கொள்க.
  

இனித் தலைவிகூற்று நிகழுமாறு:
  

பைபயப் பசந்தன்று நுதலுஞ் சாஅய்
ஐதா கின்றென் தளிர்புரை மேனியும்
பலரும் அறியத் திகழ்தரும் அவலமும்
உயிர்க்கொடு கழியின் அல்லதை நினையின்
எவனோ வாழிதோழி பொரிகால்;