இதனுள் ‘உளநாள்’ என்றது நாளது சின்னம்; ‘அரிதரோ சென்ற இளமை தரற்கு’ என்றது இளமைய தருமை; ‘உள்ளந்துரப்ப’ என்றது உள்ளத்தான் உஞற்றுதலால் தாளாண்பக்கம் சென்றோர் ‘முகப்ப பொருளுங் கிடவாது’ என்றது தகுதியது அமைதி; தந்தம் நிலைமைக்கேற்ப பொருள் செய்ய வேண்டுதலின்; அது பாணிக்கு மென்றலின்; ஒரோஒகை தம்முட்டழீஇ ஒரோஒகை ஒன்றன் கூறாடை உடுப்பவரேயாயினும் என்பது இன்மைய திளிவு; ‘வளமை விழை தக்கதுண்டோ’ என்றது உடைமைய துயர்ச்சி; பிரிந்துறை சூழாதி ஐய’ என்றது அன்பின தகலம்; ‘பிரிந்துறைந்தன்பு பெருக்கல் வேண்டா தம்முளொன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை’ என்றலின் தொய்யிலுஞ் சுணங்கு நினைத்துக்காண்’ என்றது அகற்சிய தருமை. இவ்வெட்டுந் தாமே கூறல். வேண்டினமையின் முன்னொருகால் தலைவன் கூறக்கேட்டுத் தோழியுந் தலைவியும் உணர்ந்தமை கூறியவாறு காண்க.1 |
“பொய்யற்ற கேள்வியாற் புரையோரைப் படர்ந்து நீ மையற்ற படிவத்தான் மறுத்தர லொல்வதோ.” |
(கலி-15) |
என்பது ஓதற்குப் பிரிவலெனத் தலைவன் கூறியது கேட்ட தோழி கூறியது. |
நோற்றோர் மன்ற தாமே கூற்றம் கோளுற விளியார்பிறர் கொளவிளிந் தோரெனத் தாள்வலம் படுப்பச் சேட்புலம் படர்ந்தோர் நாளிழை நெடுஞ்சுவர் நோக்கி நோயுழந்து ஆழல் வாழி தோழி தாழாஅது உருமெனச் சிலைக்கும் ஊக்கமொடு பைங்கால் வரிமான் நோன்ஞாண் வன்சிலைக் கொளீஇ அருநிறத் தழுத்திய அம்பினர் பலருடன் அண்ணல் யானை வெண்கோடு கொண்டு நறவுநொடை நெல்லின் நாண்மகிழ் அயருங் |
1 இதில் நாளது சின்மை முதலிய நான்கும் தலைவன் முன் ஒரு கால் கூறியதாகவும் இளமையது அருமை முதலிய நான்கும் தோழி அவன் பிரிவுணர்த்திய போது கூறி செலவழுங்குவித்தாகவும் கொள்க. |