கழிப்பிணிக் கறைத்தோல் நிரைகண் டன்ன உவலிடு பதுக்கை ஆளுகு பறந்தலை உருவில் பேய் ஊராத் தேரொடு நிலம்படு மின்மினி போலப் பலவுடன் இலங்குபரல் இமைக்கும் என்பநம் நலந்துறந் துறைநர் சென்ற ஆறே.” |
(அகம்-67) |
இது மண்டிலத்தருமை2 தலைவன் கூறக்கேட்ட தோழி கூறியது. |
“நம்நிலை யறியா ராயினுந் தம்நிலை அறிந்தனர் கொல்லோ தாமே யோங்குநடைக் காய்சின யானை கங்குல் சூழ அஞ்சுவர விறுத்த தானை வெஞ்சின வேந்தன் பாசறை யோரே.” |
(அகம்-264) |
இது தலைவன் பாசறைப் புலம்பினமை கூறக்கேட்ட தலைவி நம்நிலை அறியாராயினும் எனக் கூறினாள்.3 “திசை திசை தேனார்க்குந் திருமருத முன்னுறை” என்பது (பாலைக் கலி-25) காவற் பாங்கின்கட் டலைவன் கூறியது கேட்ட தலைவி கூறியது. பிறவும் வருவனவெல்லாம் இதனான் அமைக்க. |
பாரதியார் |
47. நிகழ்ந்தது.....திணையே |
கருத்து: இதுவும், முற்சூத்திரத்தைப் போலவே, ஐந்திணைச் சூத்திரங்களி லடங்காது, அறவே அவற்றின் வேறுமாகாது, திணைக்குரிப் பொருளாய் அகத்துறையில் வந்து பயிலும் பிறிதொன்று கூறுகிறது. |
2 பாலை நிலமாகிய மண்டிலத்தின் செலற்கரிய நிலை ‘என்ப‘ வரை உள்ளன தலைவன் பிரியுமுன் கூறியன. 3 பாசறையில் புலம்பியது கேட்ட தலைவி அவர் பாசறையில் இருந்து நம்மைப் பற்றிய நிலையை அறியாராயினும் நம்மைப் பிரிந்ததால்வந்த துன்பமாகிய தம் நிலையை அறிந்தாரே எனத் தலைவன்கண் நிகழ்ந்தது கூறினாள். |