பக்கம் எண் :

388தொல்காப்பியம் - உரைவளம்

பொருள்:  நிகழ்ந்ததுகூறி  -  காதலர் தம்முள் நிகழ்ந்த செய்தியை எடுத்துக் கூறி; நிலையலுந்திணையே
- நிலை பெறுதலும் அகத்துறை ஒழுக்கமேயாகும்.
 

குறிப்பு:    பழைய  உரைகாரர்  இவ்விரு  சூத்திரங்களையும்  பாலைத்திணைக்கே  உரியன  போலக்
கொள்ளுதல்   அமைவுடைத்தன்று,   பாலையில்லாப்பிற திணைகளிலும் நிகழ்ந்தது நினைத்தலும் நிகழ்ந்தது
கூறி  நிலையலும்  வருதலின்,  அவை   எல்லாத்திணைக்கும் உரியவாய்   அமையுமென்க.  அது பற்றியே,
பாலைத்திணை  இயல்புகளோடு  இவற்றைக்   கூறாது.  அவை   முடிந்து பொதுவியல்  கூறும் இவ்விடத்து
இச்சூத்திரங்கள்   வைக்கப்பட்டன.  மேலும்,  இவை  புணர்ச்சி  முதலிய ஐந்தனுள் எதனினும் அடங்காமல்
உரிப்பொருளாயுமைதலின்,   “நிலையலும்   பாலை”   -  “நிலையலும்  பிரிவு”-என்னாது, ஐந்திணைகளுள்
போல “நிலையலும் திணையே,” எனப் பொதுப்படக்கூறிய பெற்றியுமறிக.
 

தலைவி நிகழ்ந்தது கூறி நிலையலுக்குப் பாட்டு:
 

“கேட்டிசின் வாழி, தோழி! யல்கற்
பொய்வ லாளன் மெய்யற் மரீஇ
வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட வேற்றெழுந்
தமளி தைவந் தனனே, குவளை
வண்டுபடு மலரிற் சாஅய்த்
தமியேன் மன்ற வளியேன் யானே.”

(குறுந்-30)
 

“துறக லயலது மாணை மார்க்கொடி
துஞ்சுகளி றிவருங் குன்ற நாடன்
நெஞ்சுள னாக ‘நீயலென் யா’ னென-
நற்றோண் மணந்த ஞான்றை மற்றவன்
தவாஅ வஞ்சின முரைத்தது
நோயோ தோழி நின்வயி னானே”

(குறுந்-36)
 

என்பதுமது.
 

“கொடியவுங் கோட்டவும் நீரின்றி நிறம்பெறப்
பொடியழற் புறந்தந்த பூவாப்பூம் பொலன்கோதைத்
தொடிசெறி யாப்பமை யரிமுன்கை யணைத்தோளா
யடியுறை யருளாமை யொத்ததோ நினக்கென-
நரந்தநா றிருங்கூந்தல் எஞ்சாது நனிபற்றிப்