“மின்னொளி ரவிரற லிடைபோழும் பெயலேபோற் பொன்கை தகைவகிர் வகைநெறி வயங்கிட்டுப் போழிடை யிட்ட கமழ்நறும் பூங்கோதை யின்னகை யிலங்கெயிற்றுத் தேமொழித் துவர்ச்செவ்வாய் நன்னுதா னினக்கொன்று கூறுவாங் கேளினி; நில்லென நிறுத்தா னிறுத்தே வந்து நுதலு முகனுந் தோளுங் கண்ணு மியலுஞ் சொல்லு நோக்குபு நினைஇ- ஐதேய்ந் தன்று பிறையு மன்று, மைதீர்ந் தன்று மதியு மன்று, வேயமன் றன்று மலையு மன்று, பூவமன் றன்று சுனையு மன்று, மெல்ல வியலு மயிலு மன்று, சொல்லத் தளருங் கிளியு மன்று, எனவாங்கு, அனையன் பலபா ராட்டிப் பையென வலைவர் போலச் சோர்பத னொற்றிப் புலையர் போலப் புன்க ணோக்கித் தொழலுந் தொழுதான் றொடலுந் தொட்டான் காழ்வரை நில்லாக் கடுங்களி றன்னோன்; தொழூஉம் தொடூஉ மவன்றன்மை யேழைத் தன்மையோ வில்லை தோழி.” |