மரபுநிலை திரியா மாட்சிய வாகி சூ.48393

அவை    தலைவி ஆற்றாமை கண்டுழிப்  பிரிந்த தலைவன் மீண்டு வந்தானெனத் தோழி கூறுவனவும்,
வரைவிடை  வைத்துப்   பிரிந்தோன்  தலைவியை   நினைந்து  வருந்திக்  கூறுவனவும் உடன் போயவழி
இடைச்சுரத்து   நிகழ்ந்ததனை  மீண்டும்  வந்துழித்  தலைவன்   றோழிக்குக்   கூறுவனவும், யானினைத்த
வெல்லையெல்லாம்   பொருள்  முடித்து  வாராது  நின்னல    நயந்து  வந்தேனெனத் தலைவன் கூறலும்,
பொருள்வயிற்   பிரிந்தோன்  தலைவியை   நினைந்து வருந்துவனவும், இடைச்சுரத்துத்  தலைவன்  செலவு
கண்டோர்   கூறுவனவும்,  மீட்சி  கண்டோர்  கூறுவனவும்,  ஊரின்கட் கண்டோர் கூறுவனவும் பிறவுமாம்.
அவை பாலைத்திணைக்கு விரவும் பொருளாமென்றுணர்க,
 

“கோடுயர் பன்மலை பிறந்தன ராயினு
நீட விடுமோ மற்றே நீடுநினைந்து
துடைத்தொறுந் துடைத்தொறுங் கலங்கி
யுடைத்தரும் வெள்ள மாகிய கண்ணே.”

(ஐங்குறு-358)
 

இவ்வைங்குறு நூறு தலைவன் மீண்டானென்றது. “பாடின்றிப் பசந்தகண்” (பாலைக்கலி-15) என்பதும் அது.
 

“வளைபடு முத்தம் பரதவர் பகருங்
கடல்கெழு கொண்கன் காதன் மடமகள்
கெடலரும் துயர நல்கிப்
படலின் பாயல் வௌவி யோளே.”

(ஐங்குறு-195)
 

இவ்வைங்குறுநூறு வரைவிடை வைத்துப் பிரிந்தோன் தனிமைக்கு வருந்திக் கூறியது.
 

“புறந்தாழ் பிறாண்ட கூந்தற் போதி
னிறம்பெறு மீரிதழ்ப் பொலிந்த வுண்க
ணுள்ளம் பிணிக்கொண் டோள்வலி னெஞ்சஞ்
செல்ல றீர்க்குஞ் செல்வா மென்னுஞ்
செய்வினை முடியா தெவ்வஞ் செய்த
லெய்யா மையோ டிளிவுதலைந் தருமென
வுறுதி தூக்கத் தூங்கி யறிவே
சிறிதுநனி விரைய லென்னு மாயிடை
யொளிறேந்து மருப்பிற் களிறுமாறு பற்றிய