பக்கம் எண் :

394தொல்காப்பியம் - உரைவளம்

தேய்புரிப் பழங்கயிறு போல
வீவது கொல்லேன் வருந்திய உடம்பே”

(நற்றிணை-284)
 

இந்நற்றிணையும் அது.
 

“கானப் பாதிரிக் கருந்தகட் டொள்வீ
வேனில் அதிரலொடு விரைஇக் காண்வரச்
சில்லைங் கூந்த லழுத்தி மெல்லிணர்த்
தேம்பாய் மராஅம் அடைச்சி வான்கோல்
இலங்குவளை தெளிர்ப்ப வீசிச் சிலம்புநகச்
சின்மெல் லொதுக்கமொடு மென்மெல இயலிநின்
அணிமாண் சிறுபுறங் காண்கம் சிறுநனி
ஏகென ஏகல் நாணி ஒய்யென
மாகொல் நோக்கமொடு மடங்கொளச் சாஅய்
நின்றுதலை யிறைஞ்சி யோளே அதுகண்டு
யாமுந் துறுதல் செல்லேம் ஆயிடை
அருஞ்சுரத் தல்கி யேமே இரும்புலி
களிறட்டுக் குழுமும் ஓசையுங் களிபட்டு
வில்லோர் குறும்பிற் றதும்பும்
வல்வாய்க் கடுந்துடிப் பாணியுங் கேட்டே.”

(அகம்-261)
 

இது மீண்டு வந்தோன் தோழிக்கு உரைத்தது.
 

“திருந்திழை யரிவை நின்னல முள்ளி
யருஞ்செயற் பொருட்பிணி பெருந்திரு வுறுகெனச்
சொல்லாது பெயர்தந் தேனே பல்பொறிச்
சிறுகண் யானை திரிதரு
நெறிவிலங் கதர கானத் தானே.”

(ஐங்குறு-355)
 

இவ்வைங்குறுநூறு பெற்ற பொருள்கொண்டு நின்னலம் நயந்து வந்தேன் என்றது.
 

“அளிதோ தானே நாணே யாள்வினை
யெளிதென லோம்பன்மி னறிவுடை யீரே
கான்கெழு செலவின் னெஞ்சுபின் வாங்கத்
தான்சென் றனனே தமிய னதாஅன்

றென்னா வதுகொ றானே பொன்னுடை