பக்கம் எண் :

396தொல்காப்பியம் - உரைவளம்

வேட்டுவவரிக்குரிய   வெறியாடல்   விரவா   தென்றுணர்க.   *இஃது  எவ்வகைச்  சுவையான்  வரும்
மெய்ப்பாடுங் கூத்தோடும் படுதலின் அச்சுவை பற்றிவரும் மெய்ப்பாட்டிற்கும் உரித்தாயிற்று.
 

இனிக்     ‘காவற்  பாங்கின்  ஆங்கோர்  பக்கத்’திற்   (தொல்-பொ.81-41)  தலைவன்  கூறினவற்றைக்
கற்பியலுள்,   ‘தலைவன்   பகுதியினீங்கிய    தகுதிக்கட்’   (தொல்-பொ.கற்-6)   டலைவி  பரத்தையராகக்
கூறுவனவும்  இச்சூத்திரத்தான்  அமைக்க.   அவை   மருதக்கலியுட்  (93)   கடவுட்   பாட்டு  முதலியன.
அவற்றை ஆண்டுக் காட்டுதும், கண்டுணர்க.
 

இனித்  தலைவி  கற்பினுட்  பிரிவாற்றாது  எம்மையும்  உடன்  கொண்டு சென்மினென்பனவும் அவன்
அவட்கு மறுத்துக் கூறுவனவும் இதனான் அமைக்க.
 

“மரையா மரல்கவர மாரி வறப்ப
வரையோங் கருஞ்சுரத் தாரிடைச் செல்வோர்
சுரையம்பு மூழ்கச் சுருங்கிப் புரையோர்த
முண்ணீர் வறப்பப் புலர்வாடு நாவிற்குத்
தண்ணீர் பெறாஅத் தடுமாற் றருந்துயரங்
கண்ணீர் நனைக்குங் கடுமைய காடென்றா
லென்னீ ரறியாதீர் போல விவைகூறி
னின்னீர வல்ல நெடுந்தகா யெம்மையு
மன்பறச் சூழாதே யாற்றிடை நும்மொடு
துன்பந் துணையாக நாடி னதுவல்ல
தின்பமு முண்டோ வெமக்கு?”

(கலி-6)
 

இக்கலி எம்மையும் உடன்கொண்டு சென்மினென்றது.
 

“செருமிரு சினவேந்தன்” என்னும் பாலைக்கலியுள்,

“எல்வளை யெம்மொடு நீவரின் யாழநின்
மெல்லியன் மேவந்த சீறடித் தாமரை
 


* இஃது......உரித்தாயிற்று”-இத்தொடர் இடைச்செருகல் போலும், ஈண்டைக்குப் பொருத்தம் இன்று.