பக்கம் எண் :

மரபுநிலை திரியா மாட்சிய வாகி சூ.48399

மாண்வரி யாகக் குறுமகள்
தோள்மாறு படூஉம் வைகலோ டெமக்கே.”

(குறுந்-101)
 

இக்  குறுந்தொகைப்  பாட்டு  இல்லற நடத்தும் தலைவன்தான் தன் கற்புயர் காதல் மனைவியாலெய்தும்
இற்பேரின்பத்தைப் பாராட்டியது.
 

இனி தலைவன் வரவு கூறுவாளைத் தோழி வாழ்த்தற்குச் செய்யுள்:
 

“அரும்பெற லமிழ்த மார்பத மாகப்
பெரும்பெய ருலகம் பெறீஇயரோ வன்னை,
தம்மில் தமதுண் டன்ன சினை தொறும்
தீம்பழந் தூங்கும் பலவி
னோங்குமலை நாடானை வருமென் றோளே.”

(குறுந்-83)
 

அவ்வயலிலாட்டியைத் தலைவி வாழ்த்தற்குச் செய்யுள்:
 

“அமிழ்த முண்கநம் மயலி லாட்டி,
பால்கலப் பன்ன தேக்கொக் கருந்துபு
நீல மென்சிறை வள்ளுகிர்ப் பறவை
நெல்லி யம்புளி மாந்தி யயலது
முள்ளி லம்பணை மூங்கிலிற் றூங்குங்
கழை நிவந் தோங்கிய சோலை
மலைகெழு நாடனை வருமென் றோளே.”

(குறுந்-201)
 

தலைவி இயற்பட மொழிதற்குச் செய்யுள்:
 

“இதுமற் றெவனோ, தோழி! துணியிடை
இன்னர் என்னு மன்னாக் கிளவி?
இருமருப் பெருமை யீன்றணிக் காரா
உழவன் யாத்த யீன்றணிக் காரா
பாற்பெய் பைம்பயி ராரு மூரன்
திருமனைப் பல்கடம் பூண்ட
பெருமது பெண்டி ராகிய நமக்கே?

(குறுந்-181)
 

“நிலத்தினும் பெரிதே, வானினு முயர்ந்தன்று
நீரினு மாரள வின்றே, சாரற்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு