பக்கம் எண் :

உள்ளுறை உவமம் ஏனை உவமம் எனத் சூ.49405

என உவமப் போலிக்குக் கூறுதலின் அவ்விரண்டுந்1 தோன்றி நின்றது.
 

“ஏனோர்க் கெல்லா மிடம்வரை வின்றே.”

(தொல்-பொ-உவ-27)
 

என்று உவமப்போலியிற் கூறுதலாற்2 கூறுதலாற் காமக்கிழத்தியும் உள்ளுறை யுவமங் கூறினாள்.
 

குறிஞ்சியிலும் மருதத்திலும் நெய்தலிலும் இவ்வாறு வரும் கலிகளும்,
  

“யானே ஈண்டை யேனே யென்னலனே
யேனல் காவலர் கவணொடு வெரீஇக்
கான யானை கைவிடு பசுங்கழை
மீனெறி தூண்டிலி னிவக்கும்
கானக நாடனொ டாண்டொழிந் தன்றே.”
3

(குறுந்-54)
 

என்னும்    இக்   குறுந்தொகை    போல    வருவனவும்    இச்சூத்திரத்தான்  அமைக்க  பேராசிரியரும்
இப்பாட்டின் ‘மீனெறி தூண்டி’ லென்றதனை ஏனையுவமமென்றார்.
 


1 இனிதுறு   கிளவியும்   துனியுறு   கிளவியும்  ‘பாசடைத்  தாமரைத்  தனிமலர்  தளைவிடும்’ என்றது
இனிதுறு கிளவி. ‘துளிசிறந் திழிதரும் கண்ணின் நீர் அறல் வார’ என்றது துனியுறு கிளவி.

2 உவமப்போலி - உள்ளுறையுவமம்.

3 கானவர்  கவணுக்கு  அஞ்சி  யானை   கைவிட்ட   பசுங்கழை   உயரச்சென்று நின்றது போலி யான்
(தலைவி)   தலைவனின்   புகழுக்கும்   பெருமைக்கும்  இடையூறாக இருந்து  அவனைப்  போகாமல்
தடைசெய்யின்  எனக்கு  வரும்  இழிவுக்கு  அஞ்சி  இசைய  அவன்  நெடுந்தொலைவில்  சென்றான்
ஆனான்”  என்பது  இதில்  உள்ள  உள்ளுறை. இவ்வுள்ளுறைதரும் உவமத்துக்குச் சிறப்புக் கொடுத்து
நிற்கும் ஏனை உவமம் மீன்எறி தூண்டினின் நிவக்கும் நிவப்பு.