பக்கம் எண் :

410தொல்காப்பியம் - உரைவளம்

குறிப்பு:  ஈற்றேகாரம்  அசை.  ஒப்பியலறிந்தோர்  என்னுமெழுவாய்  கூறுவர்  என்னும் வினைக்கேற்ப
அவாய் நிலையாற் பெறப்பட்டது.
 

51.

உள்ளுறுத்து இதனொடு ஒத்துப் பொருள் முடிகஎன
உள்ளுறுத்து இறுவதை
1 உள்ளுறை உவமம்

(51)
 

ஆ. மொ. இல.
 

‘Ullurai Uvamam’ is that which is understood by
inference from the simile given in the text.
  

பி. இ. நூ.
 

நம்பி.238, இல.வி.அ.214.
  

அவற்றுள்
உள்ளுறை யுவமம் உய்த்துணர் வகைத்தாய்ப்
புள்ளொடும் விலங்கொடும் பிறவொடும் புலப்படும்.
 

மாறன் அக.123
  

உணர்வதற் கரிதாம் உவமப் போலி
புணர்திறம் வினையே பொருள்மெய் உருவெனப்
பிறப்பொடும் ஐந்தாம் பெற்றித் தாகி
சிறப்புறு திணைகளின் தெய்வதம் ஒழிந்த
கருப் பொருள்களனாக் கட்டுரை பயின்று
உவமையோ டெதிருள் ளுறுத்தலுற் றயலாம்
உவமச் சொல்தொக ஒருதலை ஆகியும்
அன்பின தளவாம் அகத்திணை இருவயின்
இனபதுன் பத்திசை திரிந்து இசையாத்
துணைவன் துணைவி தோழி செவிலி
இணைபெறும் பாங்கன் பாணன்என் றிவரால்
சொல்வகை பின்வரூஉம் குறிப்புடைத் தாகும்
 

இளம்பூரணர்
 

51. உள்ளுறுத்து இதனொடு.................உவமம்
 

இஃது உள்ளுறை உவமம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.
 


1 உரைப்பதே-இளம்-பாடம்