பக்கம் எண் :

ஏனை உவமம் தான்உணர் வகைத்தே சூ.52415

“உரைத்திசிற் றோழியது புரைத்தோ அன்றே
துருக்கங் கமழும் மென்தோள்
துறப்ப என்றி இறீஇயர்என் உயிரே.”

(சிற்றட்டகம்)
 

இது துருக்கம் என உவமை கூறுதலாற் குறிஞ்சியாயிற்று.*

(52)
 

நச்சினார்க்கினியர்
 

52. ஏனை................வகைத்தே.
 

இஃது ஒழிந்த உவமங் கூறுகின்றது.
 

(இ-ள்)  ஒழிந்த  உவமம்  உள்ளத்தான்  உணரவேண்டாது  சொல்லிய சொற்றொடரே பற்றுக் கோடாகத்
தானே உணர நிற்குங் கூறுபாட்டிற்கு என்றவாறு.
 

பவளம்போலும்  வாய் என்றவழிப் பவளமே கூறிவாய்  கூறாவிடின்  உள்ளுறையுவமமாம். அவ்வாறின்றி
உவமிக்கப்படும்  பொருளாகிய  வாயினையும்  புலப்படக்   கூறலின்  ஏனையுவமமாயிற்று.  அகத்திணைக்கு
உரித்தல்லாத  இதனையும் உடன்  கூறினார். உவமம்  இரண்டல்லதில்லையென வரையறுத்தற்கும்  இதுதான்
உள்ளுறை தழீஇ1 அகத்திணைக்குப் பயம்பட்டு வருமென்றற்கும்.
 

பாரதியார்
 

52. ஏனை................வகைத்தே
 

கருத்து: இஃது உள்ளுறை ஒழிந்த மற்றைய உவமத்தோற்றம் உணர்த்துகிறது.
 


* இளம்பூரணர்  உரை  பொருந்தாது  ஏனை  உவமமும் திணையுணர்த்தும் என்பதும் அதற்குக் காட்டும்
உதாரணங்களும்  பொருந்தா.  குயில்  கூவுதல் தொழிலும்  துருக்கம்  கமழ்தல் தொழிலும் காரணமாக
அன்றிக் குயில் துருக்கம் என்னும் கருப்பொருள்களாலேயே திணையுணரப்படும்.

1 உள்ளுறைதழீஇ-உள்ளுறைக்குச் சிறப்புக் கொடுத்து