பக்கம் எண் :

32தொல்காப்பியம் - உரைவளம்

போல ஈண்டுக் கொள்ளாமை, ‘நாடக வழக்கு’ என்னுஞ்சூத்திரத்துட் (53) கூறுதும்.2
  

“கணங்கொ ளருவுக் கான்கெழு நாடான்
குறும்பொறை நாட னல்வய லூரன்
தெண்கடற் சேர்ப்பன் பிரிந்தெனப் பண்டையிற்
கடும் பகல் வருதி கையறு மாலை
கொடுங்கழி நெய்தலுங் கூம்புங்
காலை வரினுங் களைஞரோ விலரே.”

(ஐந்குறு 183)
 

என இவ்வைங்குறுநூற்றுள் இடம் நியமித்துக் கூறியது செய்யுள் வழக்கு3
  

இனி அவை முறையே சிறந்து வருமாறு:-
  

“முல்லை வைந்நுனை தோன்ற வில்லமொடு
பைங்காற் கொன்றை மென்பிணி யவிழ
இரும்புதிரித் தன்ன மாயிரு மருப்பிற்
பரலவ லடைய விரலை தெறிப்ப
மலர்ந்த ஞாலம் புலம்புறங் கொடுப்பக்
கருவி வானங் கதழுறை சிதறிக்
கார்செய் தன்றே கவின்பெறு காணங்
குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி.


2. இவ்வியலிற்   கூறப்படும்    செய்திகள்,   பொருள்கள்  யாவும்   உள்ளோன்   தலைவனாக  வுள்ள
நாடகவழக்கு பற்றியனவே; இல்லோன் தலைவனாகவுள்ள நாடக வழக்கு பற்றியனவல்ல என்பது.

3. இச் செய்யுளில்   கான்கெழு  நாடான்  (குறிஞ்சி)  குறும்   பொறை நாடான்  (முல்லை) நல்வயலூரன்
(மருதம்)  சேர்ப்பன்  (நெய்தல்)  என  நானிலப்  பெயர்களால்  தலைவன்  கூறப்படினும் ‘கொடுங்கழி
நெய்தல்’  என  இடம்  கூறினமையால் அத்தலைவன் நெய்தல் நிலத்தலைவன் என்பது கூறப்பட்டதாம்.
நானிலத்துப்  பெயரும்  கூறப்பட்டு  ஓர்  நிலத்துத்  தலைவன் என்பதைப் பெற வைத்தால் இப்பாட்டு
செய்யுள் வழக்காயிற்று. உலக வழக்காயின் தெளிவாகக் கூறப்படும்.